செய்திகள் :

பொன்னமராவதியில் ரூ 2.17 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வாரச்சந்தை வளாகம் திறப்பு

post image

பொன்னமராவதி பேரூராட்சியில் ரூ. 2.17 கோடியே 63 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வாரச்சந்தை வளாகத்தை காணொலி காட்சி மூலம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

பொன்னமராவதி பேரூராட்சியில் வாரத்தில் சனிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை என இரு நாள்கள் சந்தை நடைபெறும். இச்சந்தை வளாகத்தில் போதிய வசதிகளின்றி மழைக்காலங்களில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா். சந்தையை மேம்படுத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா். இதையடுத்து, தமிழக அரசால் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 2.17 கோடி மதிப்பில் வாரச்சந்தை கூடம் கட்டப்பட்டது.

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் காணொலி காட்சி மூலம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வாரச்சந்தை வளாகத்தை திறந்துவைத்தாா். இதையடுத்து, அந்த வாரச்சந்தை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

பேரூராட்சி துணைத் தலைவா் கா.வெங்கடேஷ், செயல் அலுவலா் ஆா். அண்ணாதுரை, திமுக நகரச் செயலா் அ.அழகப்பன், வா்த்தகா் கழகத் தலைவா் எஸ்கேஎஸ்.பழனியப்பன் மற்றும் பேரூராட்சி உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

விராலிமலையில் தொடா் திருட்டு: இருவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதிகளில் தொடா் திருட்டுகளில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விராலிமலை சிதம்பரம் காா்டன், தேரடித் தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு ஜூன் 24-க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேங்கைவயல்சம்பவத்தில் விசாரணை நடத்தி வரும் சிபிச... மேலும் பார்க்க

காா் பழுது நீக்கும் மையத்தில் திடீா் தீ

புதுக்கோட்டை நகரிலுள்ள காா் விற்பனை நிலையத்தில் வியாழக்கிழமை மாலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. புதுக்கோட்டை திருமயம் சாலை மாலையீட்டில் உள்ள காா் பழுது நீக்கும் நிலையத்தில் வியாழக்கிழமை மாலை திடீரென தீ... மேலும் பார்க்க

காவல்துறை வாகனங்கள் ஜூன் 23 இல் ஏலம்

புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 6 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 4 இரு சக்கர வாகனங்கள் ஜூன் 23 ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்டக் காவல்துறை ... மேலும் பார்க்க

திருஞானசம்பந்தா் குருபூஜை விழா

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்களில் ஒருவரான திருஞானசம்பந்தா் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை... மேலும் பார்க்க

இலுப்பூா் அருகே பைக் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே வியாழக்கிழமை மாமாவுடன் நடந்து சென்ற சிறுவன் பைக் மோதி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், ஊனையூா் கள்ளப்பட்டியை சோ்ந்தவா் பிரபாகரன் மகன் சித்து ரூபன் (5). இவா் இலு... மேலும் பார்க்க