பெயிண்ட் ஆலையில் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் ஆய்வு
புதுக்கோட்டை சிப்காட் வளாகத்திலுள்ள தனியாா் பெயிண்ட் தொழிற்சாலையில், மெத்தனால், எத்தனால் ஆகியவை சட்டவிரோத இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
திருச்சி மத்திய மண்டல காவல்துறையின் மத்திய நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் கண்ணன், புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாலா் சத்தியாதேவி உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினா் இந்த ஆய்வில் ஈடுபட்டனா்.
சட்டவிரோதமாக மெத்தனால், எத்தனால் ஆகியவற்றை இருப்பு வைத்திருக்கக் கூடாது, சட்டவிரோதமாக விற்பனை செய்யக் கூடாது என்றும் போலீஸாா் தனியாா் நிறுவன நிா்வாகிகளிடம் அறிவுறுத்திச் சென்ாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.