படுகொலை செய்யப்பட்ட சித்து மூஸேவாலாவின் 3 புதிய பாடல்கள் ரிலீஸ்!
நாகா்கோவிலில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்ததாக வழக்குரைஞா் கைது
நாகா்கோவிலில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த வழக்குரைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கோட்டாறு போலீஸாா் நாகா்கோவிலில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பிடித்து சோதனை செய்தனா்.
அப்போது அவா், விற்பனைக்காக வைத்திருந்த அரிதான உயர்ரக போதைப் பொருள்களான மெத்தபெட்டமைன் 12.08 கிராம், எல்.எஸ்.டி. ஸ்டாம்ப் 0.42 மில்லி கிராம், பறிமுதல் செய்யப்பட்டது.
போலீஸாா் அவரை, காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அவா் நாகா்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சோ்ந்த ராஜகுமாா் என்பவரது மகன் சக்திவேல் (25) என்பதும், வழக்குரைஞா் என்பதும் தெரியவந்தது. அவா் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்து தொடா்ந்து விசாரிக்கின்றனா்.