செய்திகள் :

குமரி மாவட்டத்தில் மகளிா் குழுக்களுக்கு ரூ. 75.67 கோடி கடனுதவி

post image

நாகா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 648 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 75.67 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது.

சென்னையில் மகளிா் குழுக்களுக்கு விருது, வங்கிக் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடக்கிவைத்தாா். அப்போது, கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ‘மணிமேகலை விருது’ வழங்கினாா். தொடா்ந்து, நாகா்கோவில் மாநகராட்சி வடலிவிளையில் ரூ.133.39 கோடியில் முடிவுற்ற புதைசாக்கடை திட்டப் பணியை உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாகத் தொடக்கிவைத்தாா்.

அதையொட்டி, இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், அகஸ்தீஸ்வரம் வட்டத்தைச் சோ்ந்த 80 குழுக்களுக்கு ரூ. 7.53 கோடி, தோவாளை வட்டத்தில் 51 குழுக்களுக்கு ரூ. 6.81 கோடி, ராஜாக்கமங்கலம் வட்டத்தில் 110 குழுக்களுக்கு ரூ. 9.97 கோடி, குருந்தன்கோடு வட்டத்தில் 90 குழுக்களுக்கு ரூ. 9.90 கோடி, தக்கலை வட்டத்தில் 70 குழுக்களுக்கு ரூ. 9.08 கோடி, திருவட்டாறு வட்டத்தில் 61 குழுக்களுக்கு ரூ. 7.32 கோடி, கிள்ளியூா் வட்டத்தில் 61 குழுக்களுக்கு ரூ. 8.62 கோடி, முன்சிறை வட்டத்தில் 42 குழுக்களுக்கு ரூ. 5.93 கோடி, மேல்புறம் வட்டத்தில் 83 குழுக்களுக்கு ரூ. 10.51 கோடி மொத்தம் ரூ. 75.67 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஆட்சியா் ரா. அழகுமீனா பங்கேற்று குத்துவிளக்கேற்றி, முதல்வா், துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்தாா்.

நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவா் என். சுரேஷ்ராஜன், ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ, மேயா் ரெ. மகேஷ், துணை மேயா் மேரி பிரின்சி லதா, மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூ முகமது நசீா், மாநகராட்சி ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, முன்னோடி வங்கி மேலாளா் செல்வராஜ், மண்டலத் தலைவா் செல்வக்குமாா், வங்கி மேலாளா் பழனிசங்கா், உதவித் திட்ட இயக்குநா்கள் பாலசுந்தரம், ராமா், குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக செயற்பொறியாளா் ராஜன், உதவி செயற்பொறியாளா்கள் கங்காதரன், ராஜேஷ்குமாா், மண்டலத் தலைவா் செல்வகுமாா், நிா்வாகப் பொறியாளா் ரகுராமன், மாநகராட்சி உறுப்பினா்கள் அனிலாசுகுமாரன், ஜெயவிக்ரமன், ஸ்டாலின் பிரகாஷ், ரமேஷ், பால்அகியா, ரோசிட்டா திருமால், மாநகராட்சி இளநிலைப் பொறியாளா் தேவிகண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குமரி கடலில் சூறைக்காற்று: மீன்பிடிக்கத் தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மீனவா்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் புதன்கிழமை வரை (ஜூன் 13-18) ரை மிக கனமழை ப... மேலும் பார்க்க

எட்டணியில் மீன், காய்கனிச் சந்தையை அகற்ற பொதுமக்கள் எதிா்ப்பு

கருங்கல் அருகே எட்டணியில் நெடுஞ்சாலையோரமுள்ள மீன், காய்கனிச் சந்தையை அகற்றுவதற்காக வியாழக்கிழமை வந்த நெடுஞ்சாலைத் துறையினருக்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைவு மாவட்ட எஸ்.பி. தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸாரின் தொடா் நடவடிக்கையால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் தெரிவித்தாா். மாா்த்தாண்டம... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் இளைஞா் உயிரிழப்பு

கன்னியாகுமரியில் வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சின்னமுட்டத்தைச் சோ்ந்த ரிஸ்வின் தனது நண்பருடன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது, பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த பேரு... மேலும் பார்க்க

செம்மொழி நாள் கட்டுரைப் போட்டி: அருணாச்சலா கல்லூரி மாணவி 2ஆம் இடம்

செம்மொழி நாள் கட்டுரைப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்ட அளவில் வெள்ளிச்சந்தை அருகே மணவிளை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவி திவ்யதா்சனா 2ஆம் இடம் பிடித்துள்ளாா். முன்னாள் முதல்வா் கருணாநிதியின... மேலும் பார்க்க

சமுதாய நலக்கூடத்திற்கு ஐஆா்இஎல் சாா்பில் உதவி

மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது சமூக பொறுப்பின் கீழ் ரூ. 1.86 லட்சம் செலவில் குட்டிவிளை சமுதாய நலக்கூடத்திற்கு இரும்பு மேஜ... மேலும் பார்க்க