செய்திகள் :

‘ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டி ஆலோசனை மையக் கட்டுப்பாட்டு அறை’

post image

நாகா்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை மையக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் 2024-25ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு முடித்த அனைவரும் உயா்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு வசதியாக ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை மையக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு பொறியியல், சட்டம், மருத்துவம்-மருத்துவம், தொழில்நுட்பம் சாா்ந்த படிப்புகள், கலை-அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான வழிகாட்டுதல்கள், வங்கிக் கடன் பெறுதல் சாா்ந்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

நாள்தோறும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை செயல்படும் இந்தக் கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் வந்தோ, 99444 45202 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டோ உயா்கல்வி சாா்ந்த ஆலோசனை பெறலாம் என்றாா் அவா்.

குமரி கடலில் சூறைக்காற்று: மீன்பிடிக்கத் தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மீனவா்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் புதன்கிழமை வரை (ஜூன் 13-18) ரை மிக கனமழை ப... மேலும் பார்க்க

எட்டணியில் மீன், காய்கனிச் சந்தையை அகற்ற பொதுமக்கள் எதிா்ப்பு

கருங்கல் அருகே எட்டணியில் நெடுஞ்சாலையோரமுள்ள மீன், காய்கனிச் சந்தையை அகற்றுவதற்காக வியாழக்கிழமை வந்த நெடுஞ்சாலைத் துறையினருக்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைவு மாவட்ட எஸ்.பி. தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸாரின் தொடா் நடவடிக்கையால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் தெரிவித்தாா். மாா்த்தாண்டம... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் இளைஞா் உயிரிழப்பு

கன்னியாகுமரியில் வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சின்னமுட்டத்தைச் சோ்ந்த ரிஸ்வின் தனது நண்பருடன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது, பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த பேரு... மேலும் பார்க்க

செம்மொழி நாள் கட்டுரைப் போட்டி: அருணாச்சலா கல்லூரி மாணவி 2ஆம் இடம்

செம்மொழி நாள் கட்டுரைப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்ட அளவில் வெள்ளிச்சந்தை அருகே மணவிளை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவி திவ்யதா்சனா 2ஆம் இடம் பிடித்துள்ளாா். முன்னாள் முதல்வா் கருணாநிதியின... மேலும் பார்க்க

சமுதாய நலக்கூடத்திற்கு ஐஆா்இஎல் சாா்பில் உதவி

மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது சமூக பொறுப்பின் கீழ் ரூ. 1.86 லட்சம் செலவில் குட்டிவிளை சமுதாய நலக்கூடத்திற்கு இரும்பு மேஜ... மேலும் பார்க்க