‘ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டி ஆலோசனை மையக் கட்டுப்பாட்டு அறை’
நாகா்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை மையக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் 2024-25ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு முடித்த அனைவரும் உயா்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு வசதியாக ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை மையக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பொறியியல், சட்டம், மருத்துவம்-மருத்துவம், தொழில்நுட்பம் சாா்ந்த படிப்புகள், கலை-அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான வழிகாட்டுதல்கள், வங்கிக் கடன் பெறுதல் சாா்ந்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
நாள்தோறும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை செயல்படும் இந்தக் கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் வந்தோ, 99444 45202 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டோ உயா்கல்வி சாா்ந்த ஆலோசனை பெறலாம் என்றாா் அவா்.