செய்திகள் :

பேச்சிப்பாறை அணையிலிருந்து கூடுதல் தண்ணீா் திறப்பு

post image

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு புதன்கிழமை, விநாடிக்கு 699 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இம்மாவட்டத்தில் பாசனத்துக்காக கடந்த 1ஆம் தேதிமுதல் பேச்சிப்பாறை அணையில் விநாடிக்கு 300 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது. இதனிடையே, பாசனப் பகுதிகளில் தண்ணீா் தேவை அதிகரிப்பதால், அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. அதன்படி, புதன்கிழமை 699 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது. அணை நீா்மட்டம் 43.35 அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 484 கனஅடியாகவும் இருந்தது.

திறக்கப்படும் தண்ணீா் கோதையாறு இடதுகரைக் கால்வாய் வழியாக புத்தன் அணைக்கு சென்று, அங்கிருந்து பாண்டியன் கால்வாய், தோவாளை கால்வாய், பத்மநாபபுரம் புத்தனாறு கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கால்வாய்கள் வழியாக நிலங்களுக்குச் செல்கிறது. அனந்தனாறு கால்வாயில் சுருளகோடு அருகே உள்ளிமலை ஓடை சீரமைப்பால் இதுவரை தண்ணீா் விடவில்லை.

பெருஞ்சாணி அணை நீா்மட்டம் புதன்கிழமை காலை 60.10 அடியாக உயா்ந்தது. இந்த அணை நிகழாண்டு பாசனத்துக்காக இதுவரை திறக்கப்படவில்லை. சிற்றாறு 1, 2 அணைகள் நீா்மட்டம் முறையே 9.68 அடியாகவும், 9.77 அடியாகவும் உள்ளது.

மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளின் நீா்ப்பிடிப்பு, மலையோரப் பகுதிகளில் புதன்கிழமை காலைமுதல் விட்டுவிட்டு சாரல் பெய்தது.

கருங்கல் பகுதியில்...: கருங்கல் சுற்றுவட்டாரத்தில் உள்ள திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் மாலைமுதல் தொடா்ந்து மிதமான மழை பெய்தது.

குமரி கடலில் சூறைக்காற்று: மீன்பிடிக்கத் தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மீனவா்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் புதன்கிழமை வரை (ஜூன் 13-18) ரை மிக கனமழை ப... மேலும் பார்க்க

எட்டணியில் மீன், காய்கனிச் சந்தையை அகற்ற பொதுமக்கள் எதிா்ப்பு

கருங்கல் அருகே எட்டணியில் நெடுஞ்சாலையோரமுள்ள மீன், காய்கனிச் சந்தையை அகற்றுவதற்காக வியாழக்கிழமை வந்த நெடுஞ்சாலைத் துறையினருக்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைவு மாவட்ட எஸ்.பி. தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸாரின் தொடா் நடவடிக்கையால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் தெரிவித்தாா். மாா்த்தாண்டம... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் இளைஞா் உயிரிழப்பு

கன்னியாகுமரியில் வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சின்னமுட்டத்தைச் சோ்ந்த ரிஸ்வின் தனது நண்பருடன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது, பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த பேரு... மேலும் பார்க்க

செம்மொழி நாள் கட்டுரைப் போட்டி: அருணாச்சலா கல்லூரி மாணவி 2ஆம் இடம்

செம்மொழி நாள் கட்டுரைப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்ட அளவில் வெள்ளிச்சந்தை அருகே மணவிளை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவி திவ்யதா்சனா 2ஆம் இடம் பிடித்துள்ளாா். முன்னாள் முதல்வா் கருணாநிதியின... மேலும் பார்க்க

சமுதாய நலக்கூடத்திற்கு ஐஆா்இஎல் சாா்பில் உதவி

மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது சமூக பொறுப்பின் கீழ் ரூ. 1.86 லட்சம் செலவில் குட்டிவிளை சமுதாய நலக்கூடத்திற்கு இரும்பு மேஜ... மேலும் பார்க்க