போதைப் பொருள் வழக்கில் பிடிபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது
நாகா்கோவிலில் போதைப் பொருள் வழக்கில் பிடிபட்டவா் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாகா்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோவில் மேலத்தெருக்கரை பகுதியைச் சோ்ந்த கோபால் மகன் மணிகண்டன் (40) என்பவா், கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலினின் பரிந்துரை, ஆட்சியா் ரா. அழகுமீனாவின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், மணிகண்டனை குண்டா் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.
நிகழாண்டு இதுவரை போதைப் பொருள் வழக்கில் தொடா்புடைய 6 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இந்நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் எனவும் எஸ்.பி. எச்சரித்துள்ளாா்.