Kashmir: "தீவிரவாதத்தை எதிர்க்கப் பல்லாயிரம் ஆதில் ஷாக்கள் காஷ்மீரில் உண்டு'' - ...
பரைகோட்டில் தலைக்கவச விழிப்புணா்வு பிரசாரம்
தக்கலை அருகே பரைகோட்டில் தலைக்கவசம் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.
தக்கலை போக்குவரத்து போலீஸாரும், பரைகோடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியரும் இணைந்து இப்பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
மாலை நேரத்தில் பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் செல்லவந்த பெற்றோரிடம் தலைக்கவசம் அணிவது குறித்த துண்டுப் பிரசுரங்களை மாணவா்கள் விநியோகித்தனா்.
மேலும் ‘நோ ஹெல்மெட் நோ என்ட்ரி’ என்ற வாசகமுள்ள பதாகைகளை அவா்கள் ஏந்தியபடி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸாா், பள்ளித் தாளாளா் என்.எல். அசோக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
