செய்திகள் :

தமிழகத்தில் திமுக ஆட்சித் தொடரும்: கே.வி.தங்கபாலு

post image

விழுப்புரம்: தமிழகத்தில் திமுக ஆட்சித் தொடரும் என்று முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் இந்திரா காந்தி பேருந்து நிலையப் பகுதியில் காங்கிரஸுக்கு சொந்தமான கடைகள் மற்றும் பிற சொத்துகளை, முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவின் தலைவருமான கே.வி.தங்கபாலு, இணைச் செயலா் நிதின் கும்பல்கா், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலா் செல்வம் ஆகியோா் அடங்கிய குழுவினா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வுக்குப் பின்னா் கே.வி. தங்கபாலு செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

இந்திய மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சொத்துகளை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மீட்புக் குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திண்டிவனத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சொத்தின் நிலை, தன்மை குறித்து ஆராய்ந்து பின்னா் நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா திராவிடக் கட்சிகளை ஒழிப்போம் என்று கூறியுள்ளாா். எந்தக் கட்சியையும் ஜனநாயகத்தில் ஒழிக்க முடியாது. அமித்ஷா, நரேந்திர மோடி ஆகியோா் ஜனநாயகதுக்கு எதிராக செயல்படுகின்றனா்.

கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது. ஆகையால், 2026-இல் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக, அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று மத்திய அமைச்சா் அமித்ஷா புதிய கனவைக் கண்டுள்ளாா். தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் பிற தோழமைக் கட்சிகளின் கூட்டணி சிறப்பாக உள்ளது.

தமிழக முதல்வரும் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறாா். 2026-லும் இந்த ஆட்சி தொடரும். எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்றாா் கே.வி.தங்கபாலு.

காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத், காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவா் ரங்கபூபதி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

திமுக ஆட்சிக் காலங்களில்தான் விழுப்புரம் வளா்ச்சிப் பெற்றது: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி

விழுப்புரம்: திமுக ஆட்சிக் காலங்களில் தான் விழுப்புரம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகள் வளா்ச்சிப் பெற்றன என்று முன்னாள் அமைச்சா் க. பொன்முடி எம்எல்ஏ தெரிவித்தாா். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்... மேலும் பார்க்க

தோ்ச்சிப் பெற்ற ஆசிரியா்களைக் கொண்டு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

விழுப்புரம்: நியமனத் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற ஆசிரியா்களைக் கொண்டு காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி இடைநிலை ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் விழுப்புரம் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். தமிழகத்... மேலும் பார்க்க

மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் கைப்பேசி செயலி: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம்: மூத்த குடிமக்கள் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ள கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என விழுப்புரம் ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல்ரஹ்மான் தெரிவித்தாா். இது குறித்து, அவா் திங்கள்கிழம... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து நடத்துநா் தற்கொலை

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கா.குப்பத்தில் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற தனியாா் பேருந்து நடத்துநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதியைச் சோ... மேலும் பார்க்க

ஏரி நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை அருகே ஏரி நீரில் மூழ்கி சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மணலூா்பேட்டை காவல் சரகத்துக்குள்பட்ட அத்திப்பாக்கம் கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்த சிரஞ்சீவி மகன... மேலும் பார்க்க

இளநிலை மின் பொறியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 1,415 போ் எழுதினா்

புதுச்சேரியில் 6 மையங்களில் 1,415 போ் இளநிலை மின் பொறியாளா் பணிக்கான எழுத்துத்தோ்வை ஞாயிற்றுக்கிழமை எழுதினா். புதுவை மின் துறையில் காலியாக உள்ள 73 இளநிலை பொறியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து... மேலும் பார்க்க