ஈரானில் 8 புதிய அணு உலைகளை உருவாக்கும் ரஷியா!
ஈரான் நாட்டில் ரஷிய அரசு புதியதாக 8 அணு உலைகள் உருவாக்கப்போவதாக, ஈரானின் அணுசக்தி ஆணையத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் ரஷியா ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஈரானில் ரஷியாவல் 8 புதிய அணு உலைகள் கட்டப்படும் என நேற்று (ஜூன் 9) அந்நாட்டின் அணுசக்தி ஆணையத்தின் தலைவர் முஹம்மது எஸ்லமி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, 8 அணு உலைகளில் 4 உலைகள் ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள புஷேர் மாகாணத்தில் உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், புஷேர் அணுமின் நிலையத்தில் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் 2,3 உலைகள் ஈரான் நிறுவனங்களால் கட்டப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ரஷியாவின் உதவியோடு கடந்த 2011-ம் ஆண்டு கட்டப்பட்ட புஷேர் அணுமின் நிலையம் ஈரானில் நாட்டில் இயங்கிவரும் முதல் மற்றும் ஒரே அணுமின் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: காஸா சென்ற நிவாரணக் கப்பல் சிறைபிடிப்பு