செய்திகள் :

ஈரானில் 8 புதிய அணு உலைகளை உருவாக்கும் ரஷியா!

post image

ஈரான் நாட்டில் ரஷிய அரசு புதியதாக 8 அணு உலைகள் உருவாக்கப்போவதாக, ஈரானின் அணுசக்தி ஆணையத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

ஈரான் மற்றும் ரஷியா ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஈரானில் ரஷியாவல் 8 புதிய அணு உலைகள் கட்டப்படும் என நேற்று (ஜூன் 9) அந்நாட்டின் அணுசக்தி ஆணையத்தின் தலைவர் முஹம்மது எஸ்லமி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 8 அணு உலைகளில் 4 உலைகள் ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள புஷேர் மாகாணத்தில் உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், புஷேர் அணுமின் நிலையத்தில் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் 2,3 உலைகள் ஈரான் நிறுவனங்களால் கட்டப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, ரஷியாவின் உதவியோடு கடந்த 2011-ம் ஆண்டு கட்டப்பட்ட புஷேர் அணுமின் நிலையம் ஈரானில் நாட்டில் இயங்கிவரும் முதல் மற்றும் ஒரே அணுமின் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: காஸா சென்ற நிவாரணக் கப்பல் சிறைபிடிப்பு

யேமனில் இஸ்ரேல் கடற்படை முதல்முறையாகத் தாக்குதல்

துபை: யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுக நகரான ஹூதைதாவில் இஸ்ரேல் கடற்படை முதல்முறையாக செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது.தங்களின் அல்-மசீரா தொலைக்காட்சி மூலம் ஹூதி கிளர்ச்சியா... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷியா மீண்டும் தீவிர தாக்குதல்

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் தெற்கு துறைமுக நகரமான ஒடெஸா மீது ரஷியா செவ்வாய்க்கிழமை அதிகாலை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு தீவிர தாக்குதல் நடத்தியது. இதில் மூவர் உயிரிழந்தனர்; 13 பேர் காயம... மேலும் பார்க்க

ஆஸ்திரியா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் உயிரிழப்பு

கிராஸ் (ஆஸ்திரியா): ஆஸ்திரியாவின் இரண்டாவது பெரிய நகரமான கிராஸில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தியவர் ப... மேலும் பார்க்க

இஸ்ரேலில் இருந்து கிரெட்டா தன்பர்க் வெளியேற்றம்

ஜெருசலேம்: காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிவாரணக் கப்பலில் கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.இது குறித்து... மேலும் பார்க்க

கென்யா: பேருந்து விபத்தில் 5 கத்தாா்வாழ் இந்தியா்கள் உயிரிழப்பு

தோஹா: ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்கு சுற்றுலா வந்த கத்தாரில் வசிக்கும் 5 இந்தியா்கள் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனா்.கத்தாரில் வசிக்கும் 28 இந்தியா்கள் குழுவாக கென்யா நாட்டுக்கு சுற்றுலா சென்றுள... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தைத் தூண்டினால் பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல்: எஸ்.ஜெய்சங்கா் எச்சரிக்கை

பிரஸ்ஸல்ஸ்: இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டினால், பாகிஸ்தானின் உள்பகுதி வரை சென்று மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் எச்சரித்தாா்.பஹல்காம் பயங்க... மேலும் பார்க்க