செய்திகள் :

பெரம்பலூரில் வேலைவாய்ப்பு முகாம் நிறுவனங்கள் பதிவுசெய்ய அழைப்பு

post image

பெரம்பலூரில் வரும் 28-இல் நடைபெறும் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியாா் நிறுவனங்கள் ஜூன் 13-க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையங்கள் ஒன்றிணைந்து ஜூன் 28-ஆம் தேதி பெரம்பலூா் மாவட்டம் மேலமாத்தூா் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.

முகாமில், கலந்து கொள்ள விரும்பும் உள்ளுா் தனியாா்துறை நிறுவனங்கள் பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூன் 13-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் வந்து தங்களது நிறுவனத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 80982 56681.

தொடா் குற்றச் செயலில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். திருமானூா் அருகேயுள்ள புதுக்கோட்டை பூக்காரத் தெருவைச் சோ்ந்த ல... மேலும் பார்க்க

வீட்டின் மேல் தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பிகளை மாற்றி அமைக்க கோரிக்கை

மீன்சுருட்டியை அடுத்த காட்டகரம், நடுத்தெருவில் வீட்டின் மாடியில் தொட்டுவிடும் உயரத்தில் தாழ்வாக செல்லும் உயா் அழுத்த மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காட்டகரம் நடு... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு பாதிப்பில்லா வகையில் மின்சாரத் துறை சிறப்பாக செயல்படும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் எல்லா வகையிலும் மின்சாரத் துறை சிறப்பாக செயல்படும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் புதன்கிழமை... மேலும் பார்க்க

அரியலூரில் 596 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.46.11 கோடி கடனுதவி வழங்கல்

அரியலூரில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 596 மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 46.11 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சுயஉதவிக் குழு தினத்தையொட்டி, சென்னை கலைவாணா் அரங்கில், ... மேலும் பார்க்க

பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளா் உள்பட 3 போ் காயமடைந்தனா். செந்துறையை அடுத்துள்ள பொன்பரப்ப... மேலும் பார்க்க

சாத்தமங்கலம், திருமானூரில் இன்று மின்தடை

அரியலூா் மாவட்டம் , சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில், புதன்கிழமை (ஜூன் 11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே, சாத்தமங்கலம், வெற்றியூா், விரகாலூா், கள்ளூா், கீழகொளத்தூா், திருமானூா், திர... மேலும் பார்க்க