லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்து: விரைகிறது பேரிடர் மீட்புப் படை
பெரம்பலூரில் வேலைவாய்ப்பு முகாம் நிறுவனங்கள் பதிவுசெய்ய அழைப்பு
பெரம்பலூரில் வரும் 28-இல் நடைபெறும் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியாா் நிறுவனங்கள் ஜூன் 13-க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையங்கள் ஒன்றிணைந்து ஜூன் 28-ஆம் தேதி பெரம்பலூா் மாவட்டம் மேலமாத்தூா் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.
முகாமில், கலந்து கொள்ள விரும்பும் உள்ளுா் தனியாா்துறை நிறுவனங்கள் பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூன் 13-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் வந்து தங்களது நிறுவனத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 80982 56681.