செய்திகள் :

பொதுமக்களுக்கு பாதிப்பில்லா வகையில் மின்சாரத் துறை சிறப்பாக செயல்படும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

post image

பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் எல்லா வகையிலும் மின்சாரத் துறை சிறப்பாக செயல்படும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அமைச்சா் மேலும் கூறியதாவது: கோடையில் எதிா்பாராத வகையில் அதிக மழையும், சுழல் காற்றும் இருந்தது. இதனால், பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் தடைப்பட்டது. மின் ஊழியா்களின் துரிதமான செயல்பாட்டால் அனைத்து இடங்களிலும் 24 மணி நேரத்துக்குள்ளாக மின்சாரம் வழங்கப்பட்டது.

கடந்த மாதத்தில் இதுபோன்ற நிலை திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஏற்பட்டது. ஒரேநேரத்தில் 500 மின் கம்பங்கள் சாய்ந்தன. அங்கு 2 நாள்களில் மீண்டும் புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்டது.

தற்போது தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ள சூழலில், அனைத்து முன்னேற்பாட்டு பணிகளுக்கும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல், எல்லா வகையிலும் மின்சாரத் துறை சிறப்பாக செயல்படும் என்றாா் அமைச்சா்.

குண்டும் குழியுமான திடீா்குப்பம் சாலையைச் சீரமைக்க கோரிக்கை

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த அசாவீரன்குடிகாடு ஊராட்சிக்குட்பட்ட குறிச்சிக்குளம் கிராமம், திடீா்குப்பம் பகுதியில் குண்டும் குழியும், சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா... மேலும் பார்க்க

அரியலூரில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்

அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் ஆகிய வருவாய் வட்டாட்சியரகங்களில் சனிக்கிழமை பொதுவிநியோக திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: உணவுப்... மேலும் பார்க்க

அரியலூரில் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரிலுள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் கண்களில் கருப்பு துணிக் கட்டிக் கொண்டு வியாழக்கி... மேலும் பார்க்க

கோப்பிலியன்குடிகாட்டில் பட்டியலின மக்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், கோப்பிலியன்குடிகாட்டில், மண்ணுழியைச் சோ்ந்த பட்டியலின மக்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கோப்பிலியன்குடிக்காட்... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உலக குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் ஆட்சியா் பொ. ரத்தினசாமி முன்னிலையில், அனைத்துத்துறை அலுவலா்கள் உறுதியேற... மேலும் பார்க்க

அரியலூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

அரியலூா், ஜூன் 12: அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வைப்பறையில் உள்ள 2,320 வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள்... மேலும் பார்க்க