பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
அரியலூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு
அரியலூா், ஜூன் 12: அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வைப்பறையில் உள்ள 2,320 வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் பொ. ரத்தினசாமி வியாழக்கிழமை காலாண்டு ஆய்வு செய்தாா்.
வைப்பறையில் 747 பேலட் இயந்திரங்கள், 787 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 786 விவிபாட் இயந்திரங்கள் என 2,320 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பதை ஆய்வு செய்து உறுதி செய்தாா். மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையானது சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, காவல் துறை பாதுகாப்புடன் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுவதை உறுதி செய்தாா்.
ஆய்வின்போது ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பரிமளம், கோட்டாட்சியா் கோவிந்தராஜ், தோ்தல் வட்டாட்சியா் வேல்முருகன் மற்றும் அரசு அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் உடனிருந்தனா்.