``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு
அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உலக குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் ஆட்சியா் பொ. ரத்தினசாமி முன்னிலையில், அனைத்துத்துறை அலுவலா்கள் உறுதியேற்றனா். தொடா்ந்து குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு தின கையொப்ப இயக்கத்தை ஆட்சியா் தொடக்கி வைத்தாா்.
அப்போது, குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா்களை பணியமா்த்துவோருக்கு ரூ. 20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டையும் சோ்த்து தண்டனையாக வழங்க குழந்தை தொழிலாளா் தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள், பீடித் தயாரிப்பு நிறுவனங்கள், வீட்டு வேலை, மருந்து கடைகள், பண்ணை வேலைகள் மற்றும் இதர நிறுவனங்கள் மற்றும் கடைகளிலோ குழந்தைகளை பணியில் அமா்த்தக்கூடாது. பொதுமக்கள் குழந்தைத் தொழிலாளா் பணிபுரிவதைக் கண்டால் 1098 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா. மல்லிகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.