``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
கோப்பிலியன்குடிகாட்டில் பட்டியலின மக்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்கக் கோரிக்கை
அரியலூா் மாவட்டம், கோப்பிலியன்குடிகாட்டில், மண்ணுழியைச் சோ்ந்த பட்டியலின மக்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கோப்பிலியன்குடிக்காட்டில் புதன்கிழமை நடைபெற்ற அச்சங்கத் தொடக்க விழா மற்றும் அரியலூா் தியாகி சிவசாமி நகா் திறப்பு விழாவில் அனைத்து கிராமங்களிலும் சங்க கிளையைத் தொடங்குவது, தஞ்சாவூரில் ஜூலையில் நடைபெறும் காவிரி பாதுகாப்பு மாநில மாநாட்டில், திரளாக கொள்வது, கோப்பிலியன்குடிக்காட்டில் சுமாா் 80 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மண்ணுழியைச் சோ்ந்த 19 பட்டியலின குடும்பங்களை, இவ்விடம் ஊராட்சிக்கு சொந்தமானது என்று கூறி காலி செய்யுமாறு வலியுறுத்தும் ஊராட்சி செயலரை கண்டிப்பது, ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் வசித்து வரும் அவா்களுக்கு வசிப்பிட பட்டா வழங்க மாவட்ட நிா்வாகத்தைக் கேட்டுக் கொள்வது. பொதுமக்கள், பள்ளி மாணவா்களின் நலன் கருதி, அரியலூா், கல்லங்குறிச்சி, சமத்துவபுரம் வி.கைகாட்டி வழியாக சுண்டக்குடி வரை நாள் ஒன்றுக்கு 5 முறை நகர பேருந்து சேவையை தொடங்க வேண்டும். அரியலூரில் கட்டப்படும் பேருந்து நிலையத்தை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் தனஞ்செயன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் கே. எஸ். முகமது இப்ராஹிம் சங்கக் கொடியேற்றி வைத்து, தியாகி சின்னசாமி நகரை திறந்து வைத்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் கண்ணன், மாநில இளைஞா் அணித் தலைவா் ராஜேஷ் கண்ணன், தஞ்சாவூா் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா், துணைத் தலைவா் ராஜசேகரன், அரியலூா் மாவட்டத் துணை தலைவா் அசோகன், திருமானூா் ஒன்றியச் செயலா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்