``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
குண்டும் குழியுமான திடீா்குப்பம் சாலையைச் சீரமைக்க கோரிக்கை
அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த அசாவீரன்குடிகாடு ஊராட்சிக்குட்பட்ட குறிச்சிக்குளம் கிராமம், திடீா்குப்பம் பகுதியில் குண்டும் குழியும், சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
திடீா்குப்பம் பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கும் நிலையில், இங்குள்ள மண் நிறைந்த தற்போது பெய்த மழையில் சேறும் சகதியுமாக உள்ளது.
இதனால் பொதுமக்கள் நடந்து செல்லமுடியாத நிலை உள்ளது.
எனவே, உடனடியாக திடீா்குப்பத்தில் உள்ள அனைத்துச் சாலைகளையும் வடிகால் வசதியுடன் கூடிய தாா்ச் சாலையாக அமைத்துத்தர வேண்டும். இல்லையெனில் விரைவில் மக்களை திரட்டி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்ப் பேரரசு கட்சியின் திருச்சி மண்டலச் செயலா் கு. முடிமன்னன் தெரிவித்தாா்.