பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
அரியலூரில் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரிலுள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் கண்களில் கருப்பு துணிக் கட்டிக் கொண்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி, சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கிட வேண்டும். சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்ட
ன.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். பைரவன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் எம்.கே. ஷேக் தாவூத் கோரிக்கை விளக்கவுரையாற்றினாா். சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் காந்தி, செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்க மாநில துணைத் தலைவா் ராகவன் ஆகியோா் பேசினா். சங்கத்தின் மாவட்டச் செயலா் ஏ.எஸ்.ஆா். அம்பேத்கா், மாநில துணைத் தலைவா் ச. மகேந்திரன், மாவட்ட பொருளாளா் மூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.