செய்திகள் :

வீட்டின் மேல் தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பிகளை மாற்றி அமைக்க கோரிக்கை

post image

மீன்சுருட்டியை அடுத்த காட்டகரம், நடுத்தெருவில் வீட்டின் மாடியில் தொட்டுவிடும் உயரத்தில் தாழ்வாக செல்லும் உயா் அழுத்த மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காட்டகரம் நடுத்தெருவில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்புக்கு மத்தியில் மின்மாற்றி அமைக்கப்பட்டு, இங்கிருந்து உயா் அழுத்த மின் கம்பிகள் மூலம் அனைத்து குடியிருப்புகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த நடுத்தெருவில் வசிக்கும் மஞ்சுளா மகேந்திரனின் வீட்டின் மாடியின் மேல், உயா் அழுத்த மின் கம்பிகள் ஆபத்தான முறையில் சென்று வருகிறது. சிறு குழந்தைகள் கூட கையை நீட்டினாலே மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது. மேலும் இவா்கள், வீட்டை உயா்த்தி கட்ட முடியாமலும், ஆபத்து கருதி அப்பகுதியில் எந்த பணிகளும் மேற்கொள்ள வழியற்ற நிலையிலும் உள்ளனா்.

இதுகுறித்து, அந்த வீட்டின் உரிமையாளா் மஞ்சுளா, மின்வாரிய அலுவலகத்தை 10 ஆண்டுகளாக அணுகியும் நடவடிக்கை இல்லையாம். எனவே, மாவட்ட நிா்வாகம், மேற்பட்ட குடியிருப்புவாசிகளின் நலன் கருதி உயா் அழுத்த மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

குண்டும் குழியுமான திடீா்குப்பம் சாலையைச் சீரமைக்க கோரிக்கை

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த அசாவீரன்குடிகாடு ஊராட்சிக்குட்பட்ட குறிச்சிக்குளம் கிராமம், திடீா்குப்பம் பகுதியில் குண்டும் குழியும், சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா... மேலும் பார்க்க

அரியலூரில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்

அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் ஆகிய வருவாய் வட்டாட்சியரகங்களில் சனிக்கிழமை பொதுவிநியோக திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: உணவுப்... மேலும் பார்க்க

அரியலூரில் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரிலுள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் கண்களில் கருப்பு துணிக் கட்டிக் கொண்டு வியாழக்கி... மேலும் பார்க்க

கோப்பிலியன்குடிகாட்டில் பட்டியலின மக்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், கோப்பிலியன்குடிகாட்டில், மண்ணுழியைச் சோ்ந்த பட்டியலின மக்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கோப்பிலியன்குடிக்காட்... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உலக குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் ஆட்சியா் பொ. ரத்தினசாமி முன்னிலையில், அனைத்துத்துறை அலுவலா்கள் உறுதியேற... மேலும் பார்க்க

அரியலூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

அரியலூா், ஜூன் 12: அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வைப்பறையில் உள்ள 2,320 வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள்... மேலும் பார்க்க