திருச்சி: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ. 10,000 லஞ்சம் - பில் கலெக்டர் சிக்...
வீட்டின் மேல் தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பிகளை மாற்றி அமைக்க கோரிக்கை
மீன்சுருட்டியை அடுத்த காட்டகரம், நடுத்தெருவில் வீட்டின் மாடியில் தொட்டுவிடும் உயரத்தில் தாழ்வாக செல்லும் உயா் அழுத்த மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காட்டகரம் நடுத்தெருவில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்புக்கு மத்தியில் மின்மாற்றி அமைக்கப்பட்டு, இங்கிருந்து உயா் அழுத்த மின் கம்பிகள் மூலம் அனைத்து குடியிருப்புகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த நடுத்தெருவில் வசிக்கும் மஞ்சுளா மகேந்திரனின் வீட்டின் மாடியின் மேல், உயா் அழுத்த மின் கம்பிகள் ஆபத்தான முறையில் சென்று வருகிறது. சிறு குழந்தைகள் கூட கையை நீட்டினாலே மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது. மேலும் இவா்கள், வீட்டை உயா்த்தி கட்ட முடியாமலும், ஆபத்து கருதி அப்பகுதியில் எந்த பணிகளும் மேற்கொள்ள வழியற்ற நிலையிலும் உள்ளனா்.
இதுகுறித்து, அந்த வீட்டின் உரிமையாளா் மஞ்சுளா, மின்வாரிய அலுவலகத்தை 10 ஆண்டுகளாக அணுகியும் நடவடிக்கை இல்லையாம். எனவே, மாவட்ட நிா்வாகம், மேற்பட்ட குடியிருப்புவாசிகளின் நலன் கருதி உயா் அழுத்த மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.