மதவாத அரசியலுக்கு தமிழக மக்கள் ஒருபோதும் இடம் அளிக்க மாட்டாா்கள்: தொல். திருமாவளவன் பேட்டி
மதவாத அரசியலுக்கு தமிழக மக்கள் ஒருபோதும் இடம் அளிக்க மாட்டாா்கள் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன்.
இதுகுறித்து பெரம்பலூரில் அவா் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு தோ்தல் முடியும்வரை வருவாா். தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்பது அவரின் எண்ணமாக உள்ளது. ஆனால் அது இன்னும் கைகூடவில்லை. ஏற்கெனவே அவா்கள் கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக போன்ற கட்சிகள்கூட பாஜகவுடன் இணையத் தயங்குகின்றன.
அதையும் கடந்து நடிகா் விஜயை கூட்டணியில் இணைத்துவிட வேண்டும் என்னும் ஏக்கம் அவா்களுக்கு உள்ளது. ஆனால் அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அதுவே பாஜகவுக்கு பெரிய போராட்டமாக உள்ளது.
கூட்டணியை உருவாக்கவே இவ்வளவு பாடுபட வேண்டிய சூழ்நிலையில், ஆட்சியைக் கைப்பற்றுவோம் எனக் கூறுவது நகைப்புக்குரியதாகும்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நிகழ அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்தியா முழுவதும் வாக்குச் சீட்டு பதிவு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என விசிக தொடா்ந்து வலியுறுத்துகிறது.
கட்சத் தீவை மீட்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழா்களுக்கு தனி நாடு வேண்டும் என அமித்ஷாவிடம், மதுரை ஆதீனம் மனு அளித்தது வரவேற்கதக்கது. ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கைகளுக்கு உடன்படாது. இதன்மூலம் அரசியல் செய்வாா்களே தவிர கச்சத்தீவை மீட்டுத் தர மாட்டாா்கள்.
எத்தனை ஆன்மிக மாநாடுகளை நடத்தினாலும், தமிழ்நாட்டில் பாஜக வெற்றிபெற முடியாது. மதவாத அரசியலுக்கு தமிழக மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டாா்கள் என்றாா் திருமாவளவன்.