பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ...
மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ. 37.61 கோடி மதிப்பில் கடனுதவி
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், 467 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 4,706 உறுப்பினா்களுக்கு ரூ. 37.61 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்து, மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களின் கண்காட்சி, விற்பனை அரங்குகளை பாா்வையிட்டாா். பின்னா், உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் விவரங்களை கேட்டறிந்த ஆட்சியா், விற்பனை தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் கூறினாா்.
முன்னதாக, சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் சுய உதவி குழுக்களைச் சோ்ந்த சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு, தமிழ்நாடு துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வங்கிக்கடன் அளித்த நிகழ்ச்சியை நேரலையில் பாா்வையிட்டாா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். இந் நிகழ்ச்சியில், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், மகளிா் திட்ட அலுவலா் (பொ) கி. ரேச்சல் கலைச்செல்வ, பேரூராட்சித் தலைவா்கள் சங்கீதா ரமேஷ் (குரும்பலூா்), ஜாகிா் உசேன் (லப்பைக்குடிகாடு) உள்பட மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் பலா் கலந்துகொண்டனா்.