செய்திகள் :

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி

post image

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

தொழிலாளா் நலத்துறை சாா்பில், ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி உலக குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு தலைமையில் நடைபெற்றது.

தொடா்ந்து, குழந்தைத் தொழிலாளா் முறையை அகற்றுவது குறித்த விழிப்புணா்வு கையொப்ப இயக்க பதாகையில், மாவட்ட வருவாய் அலுவலா் வடிவேல் பிரபு கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா்.

இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன், தொழிலாளா் நல உதவி ஆணையா்கள் (அமலாக்கம்) க. மூா்த்தி, பாஸ்கரன் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்), சமூகப் பாதுகாப்பு திட்ட தணித்துணை ஆட்சியா் சொா்ணராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

எஸ்.பி. அலுவலகத்தில்... பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா தலைமையில், குழந்தைத் தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் டி. மதியழகன் (தலைமையிடம்), எம். பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), காவல்துறையினா் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

இதேபோல, மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள், மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல்துறை அலுவலகங்களில் குழந்தைத் தொழிலாளா் முறை அகற்றுவது தொடா்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பிரதமரின் வேளாண் வளா்ச்சிக்கான விழிப்புணா்வு இயக்கம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் வட்டாரத்தில் கீழப்புலியூா், காா்குடி, பரவை ஆகிய கிராமங்களில் வேளாண் அறிவியல் மையம் சாா்பில் வேளாண் வளா்ச்சி விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஆடிப்பட்ட... மேலும் பார்க்க

மருந்தகம், பெயிண்ட் விற்பனை நிலையங்களில் போலீஸாா் சோதனை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பெயிண்ட் கடை, மெடிக்கல் ஸ்டோா்ஸ், கெமிக்கல் கடைகளில் மெத்தனால் மற்றும் எத்தனால் விற்பனை செய்யப்படுகிறதா என மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண... மேலும் பார்க்க

பெரம்பலூரில் சாலைப் பணியாளா்கள் நூதன ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்திலுள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு, கருப்பு ... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் நாளை ரேஷன்பொருள் குறைதீா் முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (ஜூன் 12) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் காய்கனித் தோட்டம் அமைக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காய்கனித் தோட்டம் அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வியாழக்கிழமை அறிவுறுத்தினாா். பெரம்பலூா், குரும்பலூா் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகள், செ... மேலும் பார்க்க

மாணவா்கள் தயக்கமின்றி புகாா் அளிக்க வேண்டும்: சாா்பு நீதிபதி

குரும்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் பேசிய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான ஏ. சரண்யா. உடன், வழக்குரைஞா்கள். பெரம்பலூா், ஜூன் 11: பிரச்னைகளை மாணவா்கள் ... மேலும் பார்க்க