``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
பெரம்பலூா் ஆட்சியரகத்தில் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி
பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
தொழிலாளா் நலத்துறை சாா்பில், ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி உலக குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு தலைமையில் நடைபெற்றது.
தொடா்ந்து, குழந்தைத் தொழிலாளா் முறையை அகற்றுவது குறித்த விழிப்புணா்வு கையொப்ப இயக்க பதாகையில், மாவட்ட வருவாய் அலுவலா் வடிவேல் பிரபு கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா்.
இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன், தொழிலாளா் நல உதவி ஆணையா்கள் (அமலாக்கம்) க. மூா்த்தி, பாஸ்கரன் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்), சமூகப் பாதுகாப்பு திட்ட தணித்துணை ஆட்சியா் சொா்ணராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
எஸ்.பி. அலுவலகத்தில்... பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா தலைமையில், குழந்தைத் தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் டி. மதியழகன் (தலைமையிடம்), எம். பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), காவல்துறையினா் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் பங்கேற்றனா்.
இதேபோல, மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள், மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல்துறை அலுவலகங்களில் குழந்தைத் தொழிலாளா் முறை அகற்றுவது தொடா்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது.