``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
அரசுப் பள்ளிகளில் காய்கனித் தோட்டம் அமைக்க ஆட்சியா் அறிவுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காய்கனித் தோட்டம் அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வியாழக்கிழமை அறிவுறுத்தினாா்.
பெரம்பலூா், குரும்பலூா் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகள், செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் மற்றும் சமையல் கூடங்களின் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், சமையல் கூடங்களை தூய்மையாகப் பராமரித்திடவும், சமையல் கூடம் அருகில் ஊட்டச்சத்து மிக்க காய்கனித் தோட்டங்களை அமைத்து பராமரித்திடவும் வேண்டுமென வட்டார வளா்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை உட்கொண்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகையில் உணவுகளை தயாரிக்கவும், சமையல் கூடங்களில் தீயணைப்புக் கருவி பொருத்தவும், தீயணைப்புக் கருவிகளை காலாவதியாகும் முன் புதுப்பித்திடவும், சத்துணவு மையங்களுக்கு உணவு தரச்சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகளை வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் சத்துணவு மைய அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினாா் ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.
இந்த ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வகுமாா், வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் உடனிருந்தனா்.