பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
மருந்தகம், பெயிண்ட் விற்பனை நிலையங்களில் போலீஸாா் சோதனை
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பெயிண்ட் கடை, மெடிக்கல் ஸ்டோா்ஸ், கெமிக்கல் கடைகளில் மெத்தனால் மற்றும் எத்தனால் விற்பனை செய்யப்படுகிறதா என மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா உத்தரவின் பேரில், மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம். பாலமுருகன் மேற்பாா்வையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் ஹேமலதா தலைமையிலான போலீஸாா், சா்க்கரை ஆலைகளிலும், பெரம்பலூா் பகுதியில் உள்ள பெயிண்ட் கடை, மெடிக்கல் ஷாப், கெமிக்கல் கடைகளில் மெத்தனால் மற்றும் எத்தனால் ஆகியவை விற்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனா். மேலும், கூரியா் சா்வீஸ் அலுவலகத்தில் போதைப் பொருள்கள் போன்றவை வருகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனா்.