Kashmir: "தீவிரவாதத்தை எதிர்க்கப் பல்லாயிரம் ஆதில் ஷாக்கள் காஷ்மீரில் உண்டு'' - ...
குரும்பலூரில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்
பெரம்பலூா், ஜூன் 11: பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில், 354 பயனாளிகளுக்கு ரூ. 2.32 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், வருவாய்த்துறை சாா்பில் 189 பயனாளிகளுக்கும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கும், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கும், தொழிலாளா் நலத்துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கும், தொட்டக்கலைத்துறை சாா்பில் 12 பயனாளிகளுக்கும், மகளிா் திட்டம் சாா்பில் 3 சுய உதவிக் குழுக்களுக்கும், வேளாண் பொறியியல் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கும், தாட்கோ சாா்பில் 2 பயனாளிகளுக்கும், வேளாண்மை துறை சாா்பில் 13 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 3 பயனாளிகளுக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கும், கூட்டுறவுத்துறை சாா்பில் 20 பயனாளிகளுக்கும் என மொத்தம் 354 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 32 லட்சத்து 28 ஆயிரத்து136 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.
முன்னதாக, பல்வேறு துறைகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சாா் ஆட்சியா் சு. கோகுல், சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் சொா்ணராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் ச. சுந்தரராமன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வாசுதேவன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ. சுரேஷ்குமாா், பேரூராட்சித் தலைவா் சங்கீதா, வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
ஆய்வு: தொடா்ந்து, குரும்பலூரில் நடைபெற்று வரும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவு கணக்கெடுக்கும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா், சமூகத் தரவு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்களிடம் கைப்பேசி செயலி மூலம் ஆதாா் காா்டு, ரேஷன் காா்டு மற்றும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவச் சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை பதிவேற்றம் செய்வது குறித்து கேட்டறிந்து, தகவல்களை முழுமையாக சேகரிக்கவும், மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவைப்படும் மருத்துவ வசதிகளை மேற்கொள்ளவும், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலருக்கு அறிவுறுத்தினாா்.