பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ...
ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி
பெரம்பலூா் ஒன்றியத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு, தந்தை ஹேன்ஸ் ரோவா் மேல்நிலைப் பள்ளியில் எண்ணும், எழுத்தும் பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.
இப் பயிற்சியை தொடக்கி வைத்து, மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் முனைவா் ராமராஜ், மாநில அடைவு ஆய்வு முடிவுகள், எண்ணும், எழுத்தும் செயல்பாடுகள் மற்றும் கற்றல் விளைவுகள் குறித்து விளக்கி கூறினாா். தொடா்ந்து, கருத்தாளா்களாக முதுநிலை விரிவுரையாளா்கள் உமா மகேஸ்வரி, சீரங்கன், விஜயலட்சுமி, ஆசிரியா் பயிற்றுநா்கள் குணசேகரன், ரமேசு, கலைவாணன், ரமேஷ் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
இப் பயிற்சியில், வட்டாரக் கல்வி அலுவலா் இளங்கோவன் மற்றும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் 102 ஆசிரியா்கள் கலந்துகொண்டாா். நிறைவாக, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் தேவகி நன்றி கூறினாா்.