செய்திகள் :

யேமனில் இஸ்ரேல் கடற்படை முதல்முறையாகத் தாக்குதல்

post image

துபை: யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுக நகரான ஹூதைதாவில் இஸ்ரேல் கடற்படை முதல்முறையாக செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது.

தங்களின் அல்-மசீரா தொலைக்காட்சி மூலம் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதல் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். துறைமுகத்தில் கப்பல் நிறுத்தும் இடங்கள் குறிவைக்கப்பட்டதாக அவர்கள் கூறினாலும், இது தொடர்பான கூடுதல் விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது கடற்படை ஏவுகணை கப்பல்கள் மூலம் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அறிவித்தது. ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதல்களில் இஸ்ரேல் தனது கடற்படையை ஈடுபடுத்தியுள்ளது இதுவே முதல்முறை.

காஸா போரில் ஹமாஸூக்கு ஆதரவு தெரிவித்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை வீசுவது அதிகரித்துவருகிறது. இதற்கு ஹூதைதா, ராஸ் ஈஸா, அல்-சலீஃப் துறைமுகங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டிய இஸ்ரேல், அந்தப் பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இணையதளம் மூலம் திங்கள்கிழமை இரவு எச்சரிக்கை விடுத்தது.

அதன் தொடர்ச்சியாக ஹூதைதா துறைமுகத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

2014-இல் யேமன் தலைநகர் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளை ஹூதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதிலிருந்து பல்லாயிரக்கணக்கான யேமானியர்களுக்கு உணவு மற்றும் பிற

நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்கான முக்கிய நுழைவாயிலாக ஹூதைதா துறைமுகம் உள்ளது.

அந்தத் துறைமுகம் தற்போது இஸ்ரேல் கடற்படையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது யேமன் மக்களுக்கான நிவாரணப் பொருள் விநியோகத்தை பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

லாஸ் ஏஞ்சலீஸ் மக்கள் போராட்டம்: 400 பேர் கைது!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து அமெரிக்... மேலும் பார்க்க

ஹவாய்: 6 மாதங்களில் 25 முறை வெடித்த எரிமலை!

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை கடந்த 6 மாதங்களில் 25வது முறையாக வெடித்து சீற்றமடைந்துள்ளது. உலகில் அதிக சீற்றமுடைய எரிமலைகளில் ஒன்றான, ஹவாய் பெரிய தீவில் அமைந்துள்ள கிலாயூயா எரிமலை, நேற... மேலும் பார்க்க

அமெரிக்காவில் காட்டுத் தீ! 700 குடும்பங்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசித்த சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஓரிகனின் கொலம்பியா ஆற்று கனவாய... மேலும் பார்க்க

50 போட்டிக் குழுவினரைக் கொன்ற ஹமாஸ்

காஸாவில் இஸ்ரேல் உதவியுடன் தங்களுக்கு எதிராகச் செயல்படும் அபு ஷபாப் குழுவைச் சோ்ந்த 50 பேரை ஹமாஸ் படையினா் கொன்றுள்ளனா். இது குறித்து அபு ஷபாப் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு எதிரான போராட்டம்: லாஸ் ஏஞ்சலீஸில் ஊரடங்கு உத்தரவு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து அங்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டத... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு சேதம்: விசாரணைக்கு உத்தரவு

வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நோபல் பரிசு பெற்ற பழம்பெரும் எழுத்தாளா் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு தாக்கி, சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க 3 போ் கொண்ட... மேலும் பார்க்க