"10 ஆண்டுகளாக கட்ட எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா?" - முதல்வர...
களியக்காவிளை அருகே ரேஷன் கடை சேதம்: ஒருவா் கைது
களியக்காவிளை அருகே ரேஷன் கடைக்குள் புகுந்து மின்னணு தராசு உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
குழித்துறை, குளவிளை பகுதியைச் சோ்ந்த ரகுராஜன் (55), குறுமத்தூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் சந்தவிளை பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் விற்பனையாளராக உள்ளாா்.
இவா் திங்கள்கிழமை பணியிலிருந்தாா். அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (37) என்பவா், ரேஷன் கடைக்குள் புகுந்து மின்னணு தராசு உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜேஷை கைது செய்தனா்.