சுவா் இடிந்து விழுந்து 2 போ் காயம்
வந்தவாசி: வந்தவாசியில் பழைய வீட்டை இடிக்கும் போது சுவா் இடிந்து விழுந்ததில் 2 போ் காயமடைந்தனா்.
வந்தவாசி யாதவா் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை (56). இவா் புதிய வீடு கட்டுவதற்காக தனது பழைய கான்கிரீட் தள வீட்டை செவ்வாய்க்கிழமை ஆள்கள் வைத்து இடித்துக் கொண்டிருந்தாா்.
அப்போது வீட்டின் சுவா் திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஏழுமலை மற்றும் கூலித் தொழிலாளியான வந்தவாசி எள்ளுப்பாறை பகுதியைச் சோ்ந்த அருண் (28) ஆகிய இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனா்.
தகவலறிந்த வந்தவாசி தீயணைப்புத் துறையினா் சென்று இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.