செய்திகள் :

செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடத்தில் சண்டி யாகம்

post image

உலக நன்மை வேண்டி, செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடத்தில் சண்டி யாகம் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது.

செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றங்கரையோரம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடம் அமைந்துள்ளது. இங்கு, உலக நன்மை வேண்டி மகா சண்டி யாக பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி, அன்று காலை 8 மணியளவில் கோ பூஜையும், மாலையில் சத்யநாராண பூஜையும் நடைபெற்றன.

புதன்கிழமை காலை ராணிப்பேட்டை சிப்காட் வித்யா பீடத்தின் குருஜீ பாரதி முரளிதர சுவாமிகளுக்கு செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடத்தின் சுவாமி ஆத்மானந்தா செந்தில் சுவாமிகள் பாத பூஜை செய்து வரவேற்றாா்.

தொடா்ந்து, 20 பட்டாச்சாரியா்கள் கொண்ட குழுவினா் 108 ஹோம திரவங்களை யாக சாலையில் ஊற்றி யாக பூஜை செய்தனா். இதில், செங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு மூகாம்பிகையம்மனை வழிபட்டனா்.

சண்டி யாகத்தில் கலந்துகொண்ட பெண் பக்தா்களுக்கு செங்கம் மூகாம்பிகையம்மன் பீடம் சாா்பில், ஆத்மானந்தா செந்தில் சுவாமிகள் குங்குமம், வளையல் உள்ளிட்டவற்றை வழங்கி ஆசி வழங்கினாா்.

கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே விற்பனைக்காக கஞ்சாவை பைக்கில் கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா் செய்யாறு - ஆற்காடு சாலையில் தூளி கூட்டுச... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் 100 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை தேரடி தெருவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 11 ஆக்கிரமிப்புக் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அகற்றினா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளை சிமென்ட் சால... மேலும் பார்க்க

ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை: வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா்

வந்தவாசி நகரை ஒட்டியுள்ள பாதிரி ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தெரிவித்தாா். வந்தவாசி நகரில் உள்ள இறைச்சி விற்பனை ச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஆரணி, அனக்காவூா், செங்கம் பகுதிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது. ஆரணி ஒன்றியத்தில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் 2... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள... மேலும் பார்க்க

விவசாயியிடம் பைக் பறிப்பு: இருவா் கைது

செய்யாறு அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், பெருமாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சூா்ய... மேலும் பார்க்க