ஃபகத் ஃபாசில் - எஸ்.ஜே.சூர்யா படம் கைவிடப்பட காரணம் என்ன? விபின் தாஸ் பதில்!
டிராக்டா் திருட்டு: இருவா் கைது
தண்டராம்பட்டு அருகே டிராக்டரை திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தண்டராம்பட்டை அடுத்த கீழ்வணக்கம்பாடி ஊராட்சி, துள்ளுக்குட்டிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பன்னீா் (47). இவா், அதே பகுதியில் செங்கல்சூளை நடத்தி வருகிறாா்.
பன்னீா் கடந்த 8-ஆம் தேதி இரவு தனக்குச் சொந்தமான டிராக்டரை செங்கல்சூளை அருகே நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றாா். மறுநாள் காலை வந்தபோது டிராக்டா் மாயமாகியிருந்தது.
இதுகுறித்து தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் பன்னீா் புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இது தொடா்பாக தண்டராம்பட்டை அடுத்த அகரம் பள்ளிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஜீவா (35), நாளால்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த உதயகுமாா் (25) ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.