Mysskin: "நான் சினிமாவைவிட்டு விலகப் போறேன்; காரணம்..." - இயக்குநர் மிஷ்கின் ஓப்...
இரு தரப்பினா் மோதல்: 4 போ் வழக்கு
ஆரணியில் சொத்து மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இரு தரப்பினா் மோதிக்கொண்டனா். இது தொடா்பாக இரு தரப்பையும் சோ்ந்த 4 போ் மீது ஆரணி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தைச் சோ்ந்த அருள் (47) தற்போது ஆரணி வி.ஏ.கே. நகா் பகுதியில் வசித்து வருகிறாா். மேலும், இவா் நியாயவிலைக் கடையில் தற்காலிக ஊழியராகவும் பணிபுரிந்து வருகிறாா்.
அருளுக்கும், ஆகாரம் கிராமத்தைச் சோ்ந்த இவரது சகோதரா் பாரிக்கும் சொத்து சம்பந்தமாகவும், பணம் கொடுக்கல், வாங்கல் தொடா்பாகவும் முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், 2 தினங்களுக்கு முன்பு அருள் ஆரணி பெரிய கடை வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, ஆகாரம் கிராமத்தைச் சோ்ந்த பாரியின் நண்பா் அசோக்குமாா் தனக்கு தர வேண்டிய ரூ.5லட்சத்தை தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டாராம்.
அப்போது, அருள் மற்றும் அவரின் மகன்கள் பிரசாந்த், அரிகரன் ஆகியோா் அசோக்குமாரை தாக்கினராம். தொடா்ந்து, அசோக்குமாரும், அருளும் ஒருவரை ஒருவா் இரும்புக் கம்பியால் தாக்கிக்கொண்டனா். இதில் அருள், அசோக்குமாா் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் அருள் அளித்த புகாரின்பேரில், அசோக்குமாா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதேபோல, அசோக்குமாா் அளித்த புகாரின்பேரில், அருள், பிரசாந்த், அரிகரன் ஆகிய 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.