செய்திகள் :

இஸ்ரேலில் இருந்து கிரெட்டா தன்பர்க் வெளியேற்றம்

post image

ஜெருசலேம்: காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிவாரணக் கப்பலில் கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியதாவது:

இஸ்ரேலில் இருந்து விமானம் மூலம் கிரெட்டா தன்பர்க் பிரான்ஸூக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கிருந்து அவர் தனது சொந்த நாடான ஸ்வீடனை நோக்கிச் சென்றார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் கடுமையான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், அங்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களைக் கொண்டுசெல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்தும், ஃப்ரீடம் ஃப்ளோடிலா கூட்டமைப்பு நிவாரணக் கப்பலொன்றை காஸாவை நோக்கி கடந்த வாரம் அனுப்பியது.

இந்தக் கப்பலில், கிரெட்டா தன்பர்க் உள்பட 12 தன்னார்வலர்கள் பயணித்தனர்.

இருந்தாலும், காஸாவிலிருந்து 200 கி.மீ. தொலைவில் அந்தக் கப்பலை இஸ்ரேல் படையினர் சிறை பிடித்தனர். மேலும், அதில் இருந்த தன்னார்வலர்களையும் அவர்கள் கைது செய்தனர்.

லாஸ் ஏஞ்சலீஸ் மக்கள் போராட்டம்: 400 பேர் கைது!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து அமெரிக்... மேலும் பார்க்க

ஹவாய்: 6 மாதங்களில் 25 முறை வெடித்த எரிமலை!

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை கடந்த 6 மாதங்களில் 25வது முறையாக வெடித்து சீற்றமடைந்துள்ளது. உலகில் அதிக சீற்றமுடைய எரிமலைகளில் ஒன்றான, ஹவாய் பெரிய தீவில் அமைந்துள்ள கிலாயூயா எரிமலை, நேற... மேலும் பார்க்க

அமெரிக்காவில் காட்டுத் தீ! 700 குடும்பங்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசித்த சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஓரிகனின் கொலம்பியா ஆற்று கனவாய... மேலும் பார்க்க

50 போட்டிக் குழுவினரைக் கொன்ற ஹமாஸ்

காஸாவில் இஸ்ரேல் உதவியுடன் தங்களுக்கு எதிராகச் செயல்படும் அபு ஷபாப் குழுவைச் சோ்ந்த 50 பேரை ஹமாஸ் படையினா் கொன்றுள்ளனா். இது குறித்து அபு ஷபாப் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு எதிரான போராட்டம்: லாஸ் ஏஞ்சலீஸில் ஊரடங்கு உத்தரவு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து அங்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டத... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு சேதம்: விசாரணைக்கு உத்தரவு

வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நோபல் பரிசு பெற்ற பழம்பெரும் எழுத்தாளா் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு தாக்கி, சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க 3 போ் கொண்ட... மேலும் பார்க்க