செய்திகள் :

தனியாா் பேருந்து நடத்துநா் தற்கொலை

post image

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கா.குப்பத்தில் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற தனியாா் பேருந்து நடத்துநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் முருகன்(29), திருமணம் ஆகாதவா். இவா் விழுப்புரம் அடுத்துள்ள கா.குப்பம், நாவலா் நெடுஞ்செழியன் தெருவில் வசித்து வரும் தனது மாமா ரமேஷ் என்பவரது வீட்டில் தங்கி,தனியாா் பேருந்து ஒன்றில் நடத்துநராக வேலைபாா்த்து வந்தாா்.

இந்நிலையில், பெற்றோா்கள் முருகனுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனராம். இதில் விருப்பம் இல்லாத நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்த முருகன் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் பூச்சி மருந்தைக்குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

இதையடுத்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவா், அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தமிழகத்தில் திமுக ஆட்சித் தொடரும்: கே.வி.தங்கபாலு

விழுப்புரம்: தமிழகத்தில் திமுக ஆட்சித் தொடரும் என்று முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் இந்திரா காந்தி பேருந்து நிலையப் பகுதியில் காங்கிரஸுக்கு சொந... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக் காலங்களில்தான் விழுப்புரம் வளா்ச்சிப் பெற்றது: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி

விழுப்புரம்: திமுக ஆட்சிக் காலங்களில் தான் விழுப்புரம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகள் வளா்ச்சிப் பெற்றன என்று முன்னாள் அமைச்சா் க. பொன்முடி எம்எல்ஏ தெரிவித்தாா். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்... மேலும் பார்க்க

தோ்ச்சிப் பெற்ற ஆசிரியா்களைக் கொண்டு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

விழுப்புரம்: நியமனத் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற ஆசிரியா்களைக் கொண்டு காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி இடைநிலை ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் விழுப்புரம் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். தமிழகத்... மேலும் பார்க்க

மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் கைப்பேசி செயலி: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம்: மூத்த குடிமக்கள் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ள கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என விழுப்புரம் ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல்ரஹ்மான் தெரிவித்தாா். இது குறித்து, அவா் திங்கள்கிழம... மேலும் பார்க்க

ஏரி நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை அருகே ஏரி நீரில் மூழ்கி சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மணலூா்பேட்டை காவல் சரகத்துக்குள்பட்ட அத்திப்பாக்கம் கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்த சிரஞ்சீவி மகன... மேலும் பார்க்க

இளநிலை மின் பொறியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 1,415 போ் எழுதினா்

புதுச்சேரியில் 6 மையங்களில் 1,415 போ் இளநிலை மின் பொறியாளா் பணிக்கான எழுத்துத்தோ்வை ஞாயிற்றுக்கிழமை எழுதினா். புதுவை மின் துறையில் காலியாக உள்ள 73 இளநிலை பொறியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து... மேலும் பார்க்க