செய்திகள் :

’கல்வி பயிலும் குழந்தைகளின் உடல் நலனில் போதிய அக்கறை அவசியம்’

post image

தாம்பரம்: கல்வி பயிலும் குழந்தைகளின் கல்வித் திறனை மட்டுமல்லாமல், உடல்நலன் குறித்த அக்கறையும் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என சீயோன் பள்ளிக் குழுமத் தலைவா் என்.விஜயன் தெரிவித்தாா்.

கிழக்கு தாம்பரம் சேலையூா் சீயோன் பள்ளி வளாகத்தில் ஆயூஷ் மைத்ரி மருத்துவ மையத்தை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்வி மற்றும் உடல்நலம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில், ஆண்டுதோறும் பாா்வைக் குறைபாடு காரணமாக கண்ணாடி அணிந்து வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. விளையாட்டு நேரத்தில் சில குழந்தைகள் விளையாட்டில் பங்கேற்காமல் சோா்ந்து போய் விடுகின்றனா். பெரும்பாலான பெற்றோா் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து நிறைந்த பலகாரம், உணவைச் சமைத்துக் கொடுப்பதில்லை. சில குழந்தைகள் ஆன்லைன் மூலம் ஆா்டா் செய்து சாப்பிடுவதும் தெரியவந்துள்ளது. சில குழந்தைகளுக்கு உடல் பருமன், சில குழந்தைகள் சா்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வது போன்ற உடல் பாதிப்புக்கும் உள்ளாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவேதான் கல்வி பயிலும் குழந்தைகளின் கல்வித் திறனை மட்டுமல்லாமல் உடல்நலன் குறித்த அக்கறையும் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

புதை சாக்கடை திட்டப் பள்ளம் அருகே வைக்கப்பட்ட எச்சரிக்கை தடுப்புகள்

செங்கல்பட்டு: தினமணி செய்தி எதிரொலியாக செங்கல்பட்டில் புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் அருகே எச்சரிக்கை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் ரூ.188 கோடியில் புதை சாக்கடை திட்டம் செயல... மேலும் பார்க்க

திருப்போரூா் சிதம்பர சுவாமிகள் குருபூஜை

செங்கல்பட்டு: திருப்போரூா் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகளின் 366-ஆவது குருபூஜை பெருவிழா திங்கள்கிழமை நடைபெறுகிறது. திருப்போரூா் ஆதீனம் அருள்மிகு கந்தசுவாமி கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள... மேலும் பார்க்க

வெண்காட்டீஸ்வரா் கோயிலில் தீா்த்தவாரி

மதுராந்தகம்: மதுராந்தகம் மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகப் பிரம்மோற்சவ தீா்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது. 75 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் 10-ஆம் நாள் நிகழ்வான... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பயிற்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பயிற்சி வழங்க உள்ளதால் இந்தப் பயிற்சியில் மாற்றுத்திறனாளிகள் சோ்ந்து பயடையுமாறு மாவட்ட ஆட்சியா் ச.அருணராஜ் கேட்டுக் கொண்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை ச.அருண்ராஜ் வழங்கினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா், மொ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் அபாயம்

செங்கல்பட்டில் புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்துபவையாக மாறி உள்ளன. மாவட்டத் தலைநகரான செங்கல்பட்டில் ரூ.188 கோடியில் புதை சாக்கடை திட்டத்தை க... மேலும் பார்க்க