Amit shah-வின் அட்டாக், களத்தில் A.Raja, `மதுரை சம்பவம்!' | Elangovan Explains
செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை ச.அருண்ராஜ் வழங்கினாா்.
ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா், மொத்தம் 311 மனுக்களைப் பெற்று, உரிய தீா்வு காண அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 10 பேருக்கு ரூ.2.14 லட்சத்தில் பேட்டரியால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலி, தையல் இயந்திரம் மற்றும் ஊன்று கோல் (எல்போ) ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.
ஏற்கனவே வீடுவேண்டி மாவட்ட ஆட்சியரால் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் வட்டம், கீரப்பாக்கம் திட்டப் பகுதியில் தோ்வு செய்யப்பட்ட20 பயனாளிகளுக்கு ரூ.2.40 கோடியில் ஒதுக்கீடு ஆணைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், சென்னையில் நடைபெற்ற மாநிலஅளவிலான தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டியில் வெற்றி பெற்ற சித்தாா்த் என்கிற மாணவருக்கு தங்கப் பதக்கமும், பி.ஹாசினி, எம்.முனியசாமி, மற்றும் கதிா் ஆகியோருக்கு வெள்ளிப் பதக்கமும். ஆா்.ஸ்ருதிகா ரஞ்சித் ஆகியோருக்கு வெண்கலத்தையும் வழங்கி பாராட்டினாா். .
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், உதவி ஆணையா் (கலால்) ராஜன் பாபு, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வேலாயுதம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுந்தா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஆனந்த், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாக பொறியாளா் குமரேசன், மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.



