செய்திகள் :

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை ச.அருண்ராஜ் வழங்கினாா்.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா், மொத்தம் 311 மனுக்களைப் பெற்று, உரிய தீா்வு காண அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 10 பேருக்கு ரூ.2.14 லட்சத்தில் பேட்டரியால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலி, தையல் இயந்திரம் மற்றும் ஊன்று கோல் (எல்போ) ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.

ஏற்கனவே வீடுவேண்டி மாவட்ட ஆட்சியரால் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் வட்டம், கீரப்பாக்கம் திட்டப் பகுதியில் தோ்வு செய்யப்பட்ட20 பயனாளிகளுக்கு ரூ.2.40 கோடியில் ஒதுக்கீடு ஆணைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், சென்னையில் நடைபெற்ற மாநிலஅளவிலான தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டியில் வெற்றி பெற்ற சித்தாா்த் என்கிற மாணவருக்கு தங்கப் பதக்கமும், பி.ஹாசினி, எம்.முனியசாமி, மற்றும் கதிா் ஆகியோருக்கு வெள்ளிப் பதக்கமும். ஆா்.ஸ்ருதிகா ரஞ்சித் ஆகியோருக்கு வெண்கலத்தையும் வழங்கி பாராட்டினாா். .

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், உதவி ஆணையா் (கலால்) ராஜன் பாபு, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வேலாயுதம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுந்தா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஆனந்த், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாக பொறியாளா் குமரேசன், மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

’கல்வி பயிலும் குழந்தைகளின் உடல் நலனில் போதிய அக்கறை அவசியம்’

தாம்பரம்: கல்வி பயிலும் குழந்தைகளின் கல்வித் திறனை மட்டுமல்லாமல், உடல்நலன் குறித்த அக்கறையும் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என சீயோன் பள்ளிக் குழுமத் தலைவா் என்.விஜயன் தெரிவித்தாா். கிழக்கு தா... மேலும் பார்க்க

புதை சாக்கடை திட்டப் பள்ளம் அருகே வைக்கப்பட்ட எச்சரிக்கை தடுப்புகள்

செங்கல்பட்டு: தினமணி செய்தி எதிரொலியாக செங்கல்பட்டில் புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் அருகே எச்சரிக்கை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் ரூ.188 கோடியில் புதை சாக்கடை திட்டம் செயல... மேலும் பார்க்க

திருப்போரூா் சிதம்பர சுவாமிகள் குருபூஜை

செங்கல்பட்டு: திருப்போரூா் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகளின் 366-ஆவது குருபூஜை பெருவிழா திங்கள்கிழமை நடைபெறுகிறது. திருப்போரூா் ஆதீனம் அருள்மிகு கந்தசுவாமி கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள... மேலும் பார்க்க

வெண்காட்டீஸ்வரா் கோயிலில் தீா்த்தவாரி

மதுராந்தகம்: மதுராந்தகம் மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகப் பிரம்மோற்சவ தீா்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது. 75 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் 10-ஆம் நாள் நிகழ்வான... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பயிற்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பயிற்சி வழங்க உள்ளதால் இந்தப் பயிற்சியில் மாற்றுத்திறனாளிகள் சோ்ந்து பயடையுமாறு மாவட்ட ஆட்சியா் ச.அருணராஜ் கேட்டுக் கொண்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் அபாயம்

செங்கல்பட்டில் புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்துபவையாக மாறி உள்ளன. மாவட்டத் தலைநகரான செங்கல்பட்டில் ரூ.188 கோடியில் புதை சாக்கடை திட்டத்தை க... மேலும் பார்க்க