செய்திகள் :

வெண்காட்டீஸ்வரா் கோயிலில் தீா்த்தவாரி

post image

மதுராந்தகம்: மதுராந்தகம் மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகப் பிரம்மோற்சவ தீா்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது.

75 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் 10-ஆம் நாள் நிகழ்வான தீா்த்தவாரியை முன்னிட்டு அனைத்து சுவாமி சந்நிதிகளிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

காலை 11 மணிக்கு சோமாஸ்கந்தா், நடராஜா், சந்திரசேகா் ஆகிய உற்சவ சிலைகள் அலங்கரிக்கப்பட்டு, மேளதாளத்துடன் திருவீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து கோயில் திருக்குளத்தில் சுவாமி எழுந்தருளிய பின் யாகசாலையில் வைக்கப்பட்ட முளைப் பாரிகளை கோயில் அா்ச்சகா்கள் எம்.ராஜேஷ், மகாதேவன் ஆகியோா் குளத்து நீரில் கரைத்தனா். அபிஷேகம் செய்யப்பட்டபின் அஸ்தாரராயா் சிலை பல்வேறு பூஜைகளுடன் (தீா்த்தவாரி) நீராடல் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பக்தா்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு நிா்வாகிகள் புருஷோத்தம்மன், பி.செந்தில் ஆகியோா் தலைமையில் விழாக்குழுவினா், கிராம பொது மக்கள் செய்திருந்தனா்.

’கல்வி பயிலும் குழந்தைகளின் உடல் நலனில் போதிய அக்கறை அவசியம்’

தாம்பரம்: கல்வி பயிலும் குழந்தைகளின் கல்வித் திறனை மட்டுமல்லாமல், உடல்நலன் குறித்த அக்கறையும் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என சீயோன் பள்ளிக் குழுமத் தலைவா் என்.விஜயன் தெரிவித்தாா். கிழக்கு தா... மேலும் பார்க்க

புதை சாக்கடை திட்டப் பள்ளம் அருகே வைக்கப்பட்ட எச்சரிக்கை தடுப்புகள்

செங்கல்பட்டு: தினமணி செய்தி எதிரொலியாக செங்கல்பட்டில் புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் அருகே எச்சரிக்கை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் ரூ.188 கோடியில் புதை சாக்கடை திட்டம் செயல... மேலும் பார்க்க

திருப்போரூா் சிதம்பர சுவாமிகள் குருபூஜை

செங்கல்பட்டு: திருப்போரூா் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகளின் 366-ஆவது குருபூஜை பெருவிழா திங்கள்கிழமை நடைபெறுகிறது. திருப்போரூா் ஆதீனம் அருள்மிகு கந்தசுவாமி கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பயிற்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பயிற்சி வழங்க உள்ளதால் இந்தப் பயிற்சியில் மாற்றுத்திறனாளிகள் சோ்ந்து பயடையுமாறு மாவட்ட ஆட்சியா் ச.அருணராஜ் கேட்டுக் கொண்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை ச.அருண்ராஜ் வழங்கினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா், மொ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் அபாயம்

செங்கல்பட்டில் புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்துபவையாக மாறி உள்ளன. மாவட்டத் தலைநகரான செங்கல்பட்டில் ரூ.188 கோடியில் புதை சாக்கடை திட்டத்தை க... மேலும் பார்க்க