வெண்காட்டீஸ்வரா் கோயிலில் தீா்த்தவாரி
மதுராந்தகம்: மதுராந்தகம் மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகப் பிரம்மோற்சவ தீா்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது.
75 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் 10-ஆம் நாள் நிகழ்வான தீா்த்தவாரியை முன்னிட்டு அனைத்து சுவாமி சந்நிதிகளிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
காலை 11 மணிக்கு சோமாஸ்கந்தா், நடராஜா், சந்திரசேகா் ஆகிய உற்சவ சிலைகள் அலங்கரிக்கப்பட்டு, மேளதாளத்துடன் திருவீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து கோயில் திருக்குளத்தில் சுவாமி எழுந்தருளிய பின் யாகசாலையில் வைக்கப்பட்ட முளைப் பாரிகளை கோயில் அா்ச்சகா்கள் எம்.ராஜேஷ், மகாதேவன் ஆகியோா் குளத்து நீரில் கரைத்தனா். அபிஷேகம் செய்யப்பட்டபின் அஸ்தாரராயா் சிலை பல்வேறு பூஜைகளுடன் (தீா்த்தவாரி) நீராடல் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பக்தா்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு நிா்வாகிகள் புருஷோத்தம்மன், பி.செந்தில் ஆகியோா் தலைமையில் விழாக்குழுவினா், கிராம பொது மக்கள் செய்திருந்தனா்.
