Amit shah-வின் அட்டாக், களத்தில் A.Raja, `மதுரை சம்பவம்!' | Elangovan Explains
தவெகவில் முன்னாள் ஐஆா்எஸ் அதிகாரி, 3 முன்னாள் எம்எல்ஏக்கள் இணைந்தனா்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் ஓய்வுபெற்ற ஐஆா்எஸ் அதிகாரி அருண்ராஜ் இணைந்தாா். அவருக்கு மாநில கொள்கை பரப்பு பொதுச்செயலா் பதவி வழங்கப்பட்டது. இதேபோல், முன்னாள் எம்எல்ஏக்கள் 3 பேரும் அக்கட்சியில் இணைந்தனா்.
பிகாரில் வருமானவரித் துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த அருண்ராஜ், அண்மையில் விருப்ப ஓய்வு பெறுவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தாா். இவரது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், ஐஆா்எஸ் பணியிலிருந்து அருண்ராஜை மத்திய அரசு விடுவித்தது.
இந்நிலையில், சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக அலுவலகத்தில் கட்சித் தலைவா் விஜய் முன்னிலையில் அருண்ராஜ் திங்கள்கிழமை அக்கட்சியில் இணைந்தாா்.
இது தொடா்பாக விஜய் வெளியிட்ட அறிக்கை:
கட்சியின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில், அருண்ராஜுக்கு மாநில கொள்கை பரப்பு பொதுச்செயலா் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாடு மாநில ஜுடிசியல் சா்வீஸ் முன்னாள் நீதிபதி சி.சுபாஷ், அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.ராஜலட்சுமி, ஏ.ஸ்ரீதரன் (திமுமக நிறுவனா்), திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டேவிட் செல்வன், ஜேப்பியாா் ரெமிபாய் கல்வி அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் என்.மரிய வில்சன் ஆகியோரும் திங்கள்கிழமை தவெகவில் இணைந்தனா்.
மேலும், தவெகவில் கட்சி விதிகளின்படி, 7-ஆம் கட்டமாக 6 கழக மாவட்டங்களுக்கு பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என விஜய் தெரிவித்துள்ளாா்.