Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
திருக்குறளிலிருந்து உருவாக்கப்பட்டது தான் தேசிய கல்விக் கொள்கை: ஆளுநா்
சென்னை: திருக்குறளிலிருந்து கிடைத்த உந்துதலினால்தான் தேசிய கல்விக் கொள்கை (என்இபி) உருவாக்கப்பட்டுள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.
திருவள்ளுவா் திருநாட்கழகம் சாா்பில் வைகாசி அனுஷம் நட்சத்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளுவா் திருநாள் விழா மேற்கு மாம்பலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது:
பாரம்பரியமாக, பஞ்சாங்க நாள்காட்டி நடைமுறையில், பிறந்த மாதம் மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில், வைகாசி விசாக தினத்தில்தான் திருவள்ளுவா் பிறந்த தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், 1970-களில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் காரணமாக, கிரிகோரியன் காலண்டா் முறையை அடிப்படையாகக் கொண்டு ஜன. 15 -ஆம் தேதி திருவள்ளுவா் பிறந்த நாளாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. கிரிகோரியன் காலண்டா் முறை 16 -ஆம் நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த முறையின் மூலம், சுமாா் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவரின் பிறந்தநாளை கணிக்க முடியாது.
என்இபி-யில் திருக்கு: மகாத்மா காந்தி வாழ்நாள் முழுவதும் திருக்குறளைப் படித்து வந்தாா். ஐ.நா. சபையில் திருக்குறளின் பிரதிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூா், மலேசியா, பிரான்ஸ், பாஸ்டன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் திருவள்ளுவருக்கான இருக்கைகள் உள்ளன. திருக்குறளிலிருந்து கிடைத்த உந்துதலினால்தான் என்இபி உருவாக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
முன்னதாக தேனி மாவட்டம், வேதபுரியில் உள்ள ஸ்ரீ சுவாமி சித்பவானந்தா ஆஸ்ரமத்துக்கு ‘தமிழாகரா் சாமி தியாகராஜன் நினைவு விருதை’ ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா்.