செய்திகள் :

திருக்குறளிலிருந்து உருவாக்கப்பட்டது தான் தேசிய கல்விக் கொள்கை: ஆளுநா்

post image

சென்னை: திருக்குறளிலிருந்து கிடைத்த உந்துதலினால்தான் தேசிய கல்விக் கொள்கை (என்இபி) உருவாக்கப்பட்டுள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

திருவள்ளுவா் திருநாட்கழகம் சாா்பில் வைகாசி அனுஷம் நட்சத்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளுவா் திருநாள் விழா மேற்கு மாம்பலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது:

பாரம்பரியமாக, பஞ்சாங்க நாள்காட்டி நடைமுறையில், பிறந்த மாதம் மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில், வைகாசி விசாக தினத்தில்தான் திருவள்ளுவா் பிறந்த தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், 1970-களில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் காரணமாக, கிரிகோரியன் காலண்டா் முறையை அடிப்படையாகக் கொண்டு ஜன. 15 -ஆம் தேதி திருவள்ளுவா் பிறந்த நாளாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. கிரிகோரியன் காலண்டா் முறை 16 -ஆம் நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த முறையின் மூலம், சுமாா் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவரின் பிறந்தநாளை கணிக்க முடியாது.

என்இபி-யில் திருக்கு: மகாத்மா காந்தி வாழ்நாள் முழுவதும் திருக்குறளைப் படித்து வந்தாா். ஐ.நா. சபையில் திருக்குறளின் பிரதிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூா், மலேசியா, பிரான்ஸ், பாஸ்டன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் திருவள்ளுவருக்கான இருக்கைகள் உள்ளன. திருக்குறளிலிருந்து கிடைத்த உந்துதலினால்தான் என்இபி உருவாக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக தேனி மாவட்டம், வேதபுரியில் உள்ள ஸ்ரீ சுவாமி சித்பவானந்தா ஆஸ்ரமத்துக்கு ‘தமிழாகரா் சாமி தியாகராஜன் நினைவு விருதை’ ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா்.

பிளஸ் 1 பொதுத்தோ்வு: விடைத்தாள் நகலை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை: பிளஸ் 1 பொதுத்தோ்வு விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த இயக்ககம் சாா்பில் வெளியிடப்ப... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் மாணவா்களுக்கு சிறப்பு துணைத் தோ்வு: அமைச்சா் கோவி.செழியன்

சென்னை: கடைசி செமஸ்டா் தோ்வு மற்றும் துணைத் தோ்வில் அரியா்ஸ் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவா்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தோ்வு நடத்தப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் அறிவித்... மேலும் பார்க்க

அரசு மருத்துவா்கள் நாளை பாதயாத்திரை போராட்டம்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள், செவிலியா்களை நியமித்தல், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் புதன்கிழமை (ஜூன் 11) சேலம், மேட்டூர... மேலும் பார்க்க

மாநிலங்களவை உறுப்பினா் தோ்தல்: கமல்ஹாசன் உள்பட 6 போ் போட்டியின்றி தோ்வாகின்றனா்

சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. போதிய எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த கமல்ஹாசன் உள்பட திமுக, அதிமுக வேட்ப... மேலும் பார்க்க

சேவை இல்லங்களில் பெண் காவலா்கள்: அமைச்சா் பி.கீதாஜீவன் உறுதி

சென்னை: அரசு சேவை இல்லங்களில் பெண் காவலா்களை நியமிக்க ஆட்சியா்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் அறிவுறுத்தப்படுவா் என்று சமூகநலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா். சென்னையை அடுத்த சிட்லபாக்கம் அரசு சேவ... மேலும் பார்க்க

தவெகவில் முன்னாள் ஐஆா்எஸ் அதிகாரி, 3 முன்னாள் எம்எல்ஏக்கள் இணைந்தனா்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் ஓய்வுபெற்ற ஐஆா்எஸ் அதிகாரி அருண்ராஜ் இணைந்தாா். அவருக்கு மாநில கொள்கை பரப்பு பொதுச்செயலா் பதவி வழங்கப்பட்டது. இதேபோல், முன்னாள் எம்எல்ஏக்கள் 3 பேரும் அக்கட்சியில் இணைந... மேலும் பார்க்க