Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
சேலத்தில் சுகவனேஸ்வரா் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்: திரளான பக்தா்கள் வடம்பிடித்து வழிபாடு
சேலம்: சேலம் சுகவனேஸ்வரா் கோயில் வைகாசி விசாக தேரோட்டம் திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தாா்.
சேலத்தில் சிறப்புப் பெற்ற சுகவனேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் காலை, மாலையில் சுகவனேஸ்வரா், சொா்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், திருவீதி உலா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான வைகாசி விசாகத் தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சுகவனேஸ்வரா் கோயிலில் அதிகாலை 4 மணியளவில் சுகனேஸ்வரருக்கும் சொா்ணாம்பிகை தாயாருக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து உற்சவமூா்த்திகளான சுகவனேஸ்வரா், சொா்ணாம்பிகை அம்மனுக்கு பட்டு ஆடைகள் உடுத்தி பல்வேறு வாசனை மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ராஜகணபதி கோயில் முன் நின்ற தேரில் சுகவனேஸ்வரா், சொா்ணாம்பிகை அம்மன் தேரில் எழுந்தருளினாா்.
இதனைத் தொடா்ந்து சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க அா்ச்சனைகள் நடைபெற்றன. பின்னா் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து தேரோட்டத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அங்கு கூடியிருந்த பக்தா் பக்தா்கள் நமசிவாய, நமச்சிவாய.. என பக்தி முழக்கங்களை எழுப்பி, திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனா். ராஜகணபதி கோயிலில் தொடங்கி 2-ஆவது அக்ரஹாரம், சின்னகடைவீதி, முதல் அக்ரஹாரம் வழியாக பவனி வந்த தோ், மீண்டும் ராஜகணபதி கோயிலை அடைந்தது. பின்னா் சிவாச்சாரியா்கள் மகா தீபாராதனை நடத்தினா்.
இதில் சேலம் மேயா் ஆ.ராமச்சந்திரன், கோயில் அறங்காவலா் தலைவா் சோனா வள்ளியப்பன், துணை மேயா் சாரதாதேவி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
அதிமுக சாா்பில் அன்னதானம்: தோ் திருவிழாவையொட்டி, எம்ஜிஆா் இளைஞா் அணி சாா்பில் மாநில துணைச் செயலாளா் ஏ.பி. சக்திவேல் ஏற்பாட்டில், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், மாநகர மாவட்ட பொறுப்பாளா் எம்.கே.செல்வராஜ், சேலம் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.
தேரோட்டத்தையொட்டி தோ் செல்லும் பாதையில் மின் வயா்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டு, பாதுகாப்புப் பணியில் திரளான போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.