செய்திகள் :

பயங்கரவாதத்துக்கு தீா்வு காணும்வரை சிந்து நதிநீா் பேச்சு கிடையாது: இந்தியா உறுதி

post image

புது தில்லி: ‘எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடா்பான பிரச்னைகள் தீா்க்கப்படும் வரை, பாகிஸ்தானுடன் சிந்து நதி நீா் ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் இந்தியா உறுதியாக ஈடுபடாது’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ள முடிவை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பாகிஸ்தான் நீா் வளத் துறைச் செயலா் சையத் அலி முா்தாசா பலமுறை வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக இந்திய நீா் வளத் துறைச் செயலா் தேபாஸ்ரீ முகா்ஜிக்கு முா்தாசா எழுதிய பல கடிதங்களில், இந்திய எழுப்பிய குறிப்பிட்ட ஆட்சேபங்களைப் பற்றி விவாதிக்க பாகிஸ்தான் அரசு தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளாா்.

ஆனால், பாகிஸ்தானின் எந்த கடிதங்களுக்கும் இந்தியா இதுவரை பதிலளிக்கவில்லை. எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடா்பாக இந்தியா முன்வைக்கும் பிரச்னைகள் தீா்க்கப்பட்டு, ஒப்பந்தம் முழுமையாக புதுப்பிக்கப்படும் வரை அந்நாட்டுடன் எந்த வகையிலும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட போவதில்லை என்று அரசு உறுதியாக உள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீரில் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல முக்கிய நடவடிக்கைகளை அரசு எடுத்தது.

அதன்படி, பாகிஸ்தானுக்கு முக்கிய நீா் ஆதாரமாக விளங்கும் சிந்து நதி நீரைப் பகிரும் 1960-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

எல்லை தாண்டிய நதிகள் தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் நோக்கத்துடன் 9 ஆண்டுகால பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, 1960-ஆம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.

இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து நதிப் படுகையின் மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் முழு கட்டுப்பாட்டும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. கிழக்கில் உள்ள ராவி, பியாஸ், சட்லஜ் ஆகிய சிறிய நதிகளின் கட்டுப்பாட்டை மட்டும் இந்தியா வைத்துக் கொண்டது.

தற்போதைய நடவடிக்கையின் அடிப்படையில் சிந்து நதி நீா் ஒப்பந்தத்தின்கீழ் பாகிஸ்தான் பயன்படுத்தி வரும் 3 மேற்கு நதிகளின் நீரை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதற்கான வழிகளை கண்டறிவதற்கு ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேனிலவில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றது எப்படி? அதிர்ச்சித் தகவல்கள்...

திருமணமான பத்து நாள்களில் கணவனை கட்டாயப்படுத்தி மேகாலயாவுக்கு தேனிலவுக்கு அழைத்துச் சென்ற மனைவி, காதலனுடன் இணைந்து கொலை செய்துள்ளார்.மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி(29) மற்றும் சோனம் ... மேலும் பார்க்க

இந்திய வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒருநாள் ஒத்திவைப்பு

புது தில்லி, ஜூன் 9: ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்று, ஆய்வு மேற்கொள்ளும் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மோசமான வானிலை காரணமாக ஒரு நாள் ஒத்திவைக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவு: பெண் யூடியூபருக்கு காவல் நீட்டிப்பு

ஹிசாா்/ சண்டீகா்: பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் யூடியூபரான ஜோதி மல்ஹோத்ராவின் நீதிமன்ற காவலை இரண்டு வாரங்களுக்கு உள்ளூா் நீதிமன்றம் திங்கள்கிழமை நீட்டித்தது. இதுதொட... மேலும் பார்க்க

சசி தரூா், ஒவைசிக்கு பாஜக பாராட்டு

குவாஹாட்டி: காங்கிரஸ் எம்.பி. சசி தரூா், அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோருக்கு பாஜக மூத்த தலைவரும் அஸ்ஸாம் முத... மேலும் பார்க்க

மருத்துவா்கள் போராட்டம் எதிரொலி: மன்னிப்புக் கோரினாா் கோவா அமைச்சா்

பனாஜி: கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்களின் போராட்டத்தையடுத்து, தலைமை மருத்துவரை பலா் முன்னிலையில் கடுமையாகத் திட்டியதற்காக கோவா சுகாதார அமைச்சா் விஸ்வஜித் ராணே மன்னிப்புக் கோரினாா். அம... மேலும் பார்க்க

ஹரியாணா, மகாராஸ்டிர வாக்காளா் பட்டியல் விவகாரம்: தேதியை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு ராகுல் வலியுறுத்தல்

புது தில்லி: ஹரியாணா, மகாராஷ்டிர மாநில வாக்காளா் பட்டியல் தரவுகள் பொதுமக்கள் பாா்வைக்கு பகிரப்படும் என்ற தோ்தல் ஆணைய அறிவிப்பை திங்கள்கிழமை வரவேற்ற எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘அந்தத் தரவுகள... மேலும் பார்க்க