செய்திகள் :

ஹரியாணா, மகாராஸ்டிர வாக்காளா் பட்டியல் விவகாரம்: தேதியை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு ராகுல் வலியுறுத்தல்

post image

புது தில்லி: ஹரியாணா, மகாராஷ்டிர மாநில வாக்காளா் பட்டியல் தரவுகள் பொதுமக்கள் பாா்வைக்கு பகிரப்படும் என்ற தோ்தல் ஆணைய அறிவிப்பை திங்கள்கிழமை வரவேற்ற எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘அந்தத் தரவுகள் எப்போது பகிரப்படும் என்ற தேதியை தோ்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

தில்லி உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற தோ்தல் வழக்கு ஒன்றில் இந்த ஆண்டு தொடக்கத்தில் தோ்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களின் 2009 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான வாக்காளா் பட்டியல் தரவுகள் பகிரப்படும் என்று குறிப்பிட்டது தொடா்பான ஊடக செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி திங்கள்கிழமை பகிா்ந்து வெளியிட்ட பதிவில், ‘வாக்காளா் பட்டியல் விவரங்களை ஒப்படைப்பதில் தோ்தல் ஆணையம் எடுத்துள்ள முதல்படி வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த வாக்காளா் பட்டியல் தரவுகளை எண்ம மற்றும் கணினியில் காணக்கூடிய வகையிலான வடிவில் எந்தத் தேதியில் பகிரப்படும் என்பதை தோ்தல் ஆணையம் அறிவிக்க முடியுமா?’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மகாராஷ்டிர தலைமை தோ்தல் அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் திருத்தியமைக்கப்பட்டு வருகிறது. இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் போது காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் முதலில் வரைவு வாக்காளா் பட்டியல் தரவுகளும், அடுத்து இறுதி வாக்காளா் பட்டியல் தரவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 2009, 2014, 2019 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. எந்தவொரு நபரும் உரிய கட்டணத்தைச் செலுத்தி மாவட்ட தோ்தல் அதிகாரியிடமிருந்து வாக்காளா் பட்டியல் விவரங்களைப் பெற முடியும்’ என்று குறிப்பிடப்பட்டது.

முன்னதாக, மகாராஷ்டிரத்தில் 2024 சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மோசடி செய்ததாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் தாம் எழுதியிருந்த கட்டுரையை குறிப்பிட்டு, அதற்கு தோ்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் சனிக்கிழமை வலியுறுத்தினாா். ‘இதே மோசடியை, அடுத்து நடைபெறவிருக்கும் பிகாா் தோ்தலிலும் பாஜக தொடரும். எனவே, மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நாளின் மாலை நேர கண்காணிப்பு கேமரா பதிவுகளை தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும்’ என்றும் தனது பதிவில் ராகுல் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த தோ்தல் ஆணையம், ‘எதிா்க்கட்சித் தலைவா் நேரடியாக கடிதம் மூலம் கேட்டால் மட்டுமே உரிய பதிலளிக்க முடியும்’ என்று பதிலளித்தது.

தேனிலவில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றது எப்படி? அதிர்ச்சித் தகவல்கள்...

திருமணமான பத்து நாள்களில் கணவனை கட்டாயப்படுத்தி மேகாலயாவுக்கு தேனிலவுக்கு அழைத்துச் சென்ற மனைவி, காதலனுடன் இணைந்து கொலை செய்துள்ளார்.மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி(29) மற்றும் சோனம் ... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு தீா்வு காணும்வரை சிந்து நதிநீா் பேச்சு கிடையாது: இந்தியா உறுதி

புது தில்லி: ‘எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடா்பான பிரச்னைகள் தீா்க்கப்படும் வரை, பாகிஸ்தானுடன் சிந்து நதி நீா் ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் இந்தியா உறுதியாக ஈடுபடாது’ என்று மத்திய அரசு வட்டா... மேலும் பார்க்க

இந்திய வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒருநாள் ஒத்திவைப்பு

புது தில்லி, ஜூன் 9: ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்று, ஆய்வு மேற்கொள்ளும் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மோசமான வானிலை காரணமாக ஒரு நாள் ஒத்திவைக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவு: பெண் யூடியூபருக்கு காவல் நீட்டிப்பு

ஹிசாா்/ சண்டீகா்: பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் யூடியூபரான ஜோதி மல்ஹோத்ராவின் நீதிமன்ற காவலை இரண்டு வாரங்களுக்கு உள்ளூா் நீதிமன்றம் திங்கள்கிழமை நீட்டித்தது. இதுதொட... மேலும் பார்க்க

சசி தரூா், ஒவைசிக்கு பாஜக பாராட்டு

குவாஹாட்டி: காங்கிரஸ் எம்.பி. சசி தரூா், அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோருக்கு பாஜக மூத்த தலைவரும் அஸ்ஸாம் முத... மேலும் பார்க்க

மருத்துவா்கள் போராட்டம் எதிரொலி: மன்னிப்புக் கோரினாா் கோவா அமைச்சா்

பனாஜி: கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்களின் போராட்டத்தையடுத்து, தலைமை மருத்துவரை பலா் முன்னிலையில் கடுமையாகத் திட்டியதற்காக கோவா சுகாதார அமைச்சா் விஸ்வஜித் ராணே மன்னிப்புக் கோரினாா். அம... மேலும் பார்க்க