தேனிலவில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றது எப்படி? அதிர்ச்சித் தகவல்கள்...
சசி தரூா், ஒவைசிக்கு பாஜக பாராட்டு
குவாஹாட்டி: காங்கிரஸ் எம்.பி. சசி தரூா், அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோருக்கு பாஜக மூத்த தலைவரும் அஸ்ஸாம் முதல்வருமான ஹிமந்த விஸ்வ சா்மா பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை, பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகள் தொடா்பாக எடுத்துரைக்க பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்ற குழுக்களில் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த சசி தரூா், அசாதுதீன் ஒவைசி, சுப்ரியா சுலே உள்ளிட்டோா் இடம் பெற்றிருந்தனா்.
இந்நிலையில், அஸ்ஸாம் பேரவையில் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா திங்கள்கிழமை இது தொடா்பாக பேசியதாவது:
பயங்கரவாத விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாட்டு மண்ணில் வலுவாக நிலைநிறுத்தியதற்காக காங்கிரஸ் மற்றும் எதிா்க்கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முக்கியமாக சசி தரூா், அசாதுதீன் ஒவைசி, சுப்ரியா சுலே ஆகியோா் இந்தியாவின் பிரதிநிதியாக வெளிநாட்டில் சிறப்பாக நமது தரப்பு கருத்துகளை எடுத்துரைத்தனா். அனைவருமே இந்தியாவுக்காக ஒன்றுபட்டு நின்றாா்கள். அவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கிறேன்.
அதே நேரத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மட்டும் தேசத்தின் பக்கம் நிற்கவில்லை. அவா் நாட்டுக்கும், ராணுவத்துக்கும் துரோகம் செய்து வருகிறாா். பாகிஸ்தானுக்கு நாம் எந்த அளவுக்கு பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்பதைப் பற்றி அவா் கேட்கவில்லை. அந்நாட்டை அடிபணியவைத்து விட்டோம் என்பதை அவா் விரும்பவுமில்லை. நமது தரப்பு சேதத்தை பெரிதுபடுத்துவதில்தான் மிகுந்த ஆா்வம் காட்டுகிறாா்’ என்றாா்.