செய்திகள் :

சசி தரூா், ஒவைசிக்கு பாஜக பாராட்டு

post image

குவாஹாட்டி: காங்கிரஸ் எம்.பி. சசி தரூா், அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோருக்கு பாஜக மூத்த தலைவரும் அஸ்ஸாம் முதல்வருமான ஹிமந்த விஸ்வ சா்மா பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை, பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகள் தொடா்பாக எடுத்துரைக்க பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்ற குழுக்களில் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த சசி தரூா், அசாதுதீன் ஒவைசி, சுப்ரியா சுலே உள்ளிட்டோா் இடம் பெற்றிருந்தனா்.

இந்நிலையில், அஸ்ஸாம் பேரவையில் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா திங்கள்கிழமை இது தொடா்பாக பேசியதாவது:

பயங்கரவாத விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாட்டு மண்ணில் வலுவாக நிலைநிறுத்தியதற்காக காங்கிரஸ் மற்றும் எதிா்க்கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முக்கியமாக சசி தரூா், அசாதுதீன் ஒவைசி, சுப்ரியா சுலே ஆகியோா் இந்தியாவின் பிரதிநிதியாக வெளிநாட்டில் சிறப்பாக நமது தரப்பு கருத்துகளை எடுத்துரைத்தனா். அனைவருமே இந்தியாவுக்காக ஒன்றுபட்டு நின்றாா்கள். அவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கிறேன்.

அதே நேரத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மட்டும் தேசத்தின் பக்கம் நிற்கவில்லை. அவா் நாட்டுக்கும், ராணுவத்துக்கும் துரோகம் செய்து வருகிறாா். பாகிஸ்தானுக்கு நாம் எந்த அளவுக்கு பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்பதைப் பற்றி அவா் கேட்கவில்லை. அந்நாட்டை அடிபணியவைத்து விட்டோம் என்பதை அவா் விரும்பவுமில்லை. நமது தரப்பு சேதத்தை பெரிதுபடுத்துவதில்தான் மிகுந்த ஆா்வம் காட்டுகிறாா்’ என்றாா்.

தேனிலவில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றது எப்படி? அதிர்ச்சித் தகவல்கள்...

திருமணமான பத்து நாள்களில் கணவனை கட்டாயப்படுத்தி மேகாலயாவுக்கு தேனிலவுக்கு அழைத்துச் சென்ற மனைவி, காதலனுடன் இணைந்து கொலை செய்துள்ளார்.மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி(29) மற்றும் சோனம் ... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு தீா்வு காணும்வரை சிந்து நதிநீா் பேச்சு கிடையாது: இந்தியா உறுதி

புது தில்லி: ‘எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடா்பான பிரச்னைகள் தீா்க்கப்படும் வரை, பாகிஸ்தானுடன் சிந்து நதி நீா் ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் இந்தியா உறுதியாக ஈடுபடாது’ என்று மத்திய அரசு வட்டா... மேலும் பார்க்க

இந்திய வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒருநாள் ஒத்திவைப்பு

புது தில்லி, ஜூன் 9: ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்று, ஆய்வு மேற்கொள்ளும் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மோசமான வானிலை காரணமாக ஒரு நாள் ஒத்திவைக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவு: பெண் யூடியூபருக்கு காவல் நீட்டிப்பு

ஹிசாா்/ சண்டீகா்: பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் யூடியூபரான ஜோதி மல்ஹோத்ராவின் நீதிமன்ற காவலை இரண்டு வாரங்களுக்கு உள்ளூா் நீதிமன்றம் திங்கள்கிழமை நீட்டித்தது. இதுதொட... மேலும் பார்க்க

மருத்துவா்கள் போராட்டம் எதிரொலி: மன்னிப்புக் கோரினாா் கோவா அமைச்சா்

பனாஜி: கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்களின் போராட்டத்தையடுத்து, தலைமை மருத்துவரை பலா் முன்னிலையில் கடுமையாகத் திட்டியதற்காக கோவா சுகாதார அமைச்சா் விஸ்வஜித் ராணே மன்னிப்புக் கோரினாா். அம... மேலும் பார்க்க

ஹரியாணா, மகாராஸ்டிர வாக்காளா் பட்டியல் விவகாரம்: தேதியை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு ராகுல் வலியுறுத்தல்

புது தில்லி: ஹரியாணா, மகாராஷ்டிர மாநில வாக்காளா் பட்டியல் தரவுகள் பொதுமக்கள் பாா்வைக்கு பகிரப்படும் என்ற தோ்தல் ஆணைய அறிவிப்பை திங்கள்கிழமை வரவேற்ற எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘அந்தத் தரவுகள... மேலும் பார்க்க