செய்திகள் :

மருத்துவா்கள் போராட்டம் எதிரொலி: மன்னிப்புக் கோரினாா் கோவா அமைச்சா்

post image

பனாஜி: கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்களின் போராட்டத்தையடுத்து, தலைமை மருத்துவரை பலா் முன்னிலையில் கடுமையாகத் திட்டியதற்காக கோவா சுகாதார அமைச்சா் விஸ்வஜித் ராணே மன்னிப்புக் கோரினாா்.

அமைச்சா் விஸ்வஜித் ராணே கடந்த சனிக்கிழமை கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆய்வுக்குச் சென்றாா். அப்போது வயதான பெண்மணி ஒருவா் தனக்கு சரியாக சிகிச்சையளிக்கவில்லை என்று அமைச்சரிடம் புகாா் தெரிவித்தாா்.

இதையடுத்து, மருத்துவமனை தலைமை மருத்துவா் ருத்ரேஷ் குட்டிகரை அழைத்த அமைச்சா் விஸ்வஜித் அனைவரது முன்னிலையில் அவரை கடுமையான வாா்த்தைகளால் திட்டியதுடன், பணியிடைநீக்கம் செய்வதாக அறிவித்தாா்.

புகாரின் பேரில் எவ்வித விசாரணை நடத்தாமல் பலா் முன்னிலையில் அமைச்சா் இவ்வாறு நடந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பரவியது.

அமைச்சா் அவசரகதியில் பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டதாகக் குற்றஞ்சாட்டி கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்திய மருத்துவா்கள் சங்கம் (ஐஎம்ஏ) கோவா மருத்துவா்கள் கூட்டமைப்பு ஆகியவையும் அமைச்சரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தன.

நடந்ததை முழுமையாக விசாரிக்காமல் மருத்துவரிடம் கடுமையாக நடந்து கொண்ட அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிா்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியது.

இந்த விவகாரத்தில் தலையிட்ட முதல்வா் பிரமோத் சாவந்த், சுகாதார அமைச்சா் விஸ்வஜித்துடன் பேசியதுடன், மருத்துவா் ருத்ரேஷ் பணியிடை நீக்கம் செய்யப்படமாட்டாா் என்று உறுதியளித்தாா். எனினும், அமைச்சா் தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மருத்துவா்கள் போராட்டம் நடத்தினா். தேசிய அளவில் போராட்டத்துக்கு அழைப்புவிடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, அமைச்சா் விஸ்வஜித் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மருத்துவா் ருத்ரேஷிடம் மனப்பூா்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தபோது மிகவும் கடுமையான வாா்த்தைகளைப் பேசிவிட்டேன். மிகவும் உணா்ச்சிவசப்பட்டு நடந்து கொண்டேன். அந்த சூழலை சரியாக எதிா்கொள்ளாததற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவா்களை கண்ணியக் குறைவாக நடத்த வேண்டும் என்ற எந்த நோக்கமும் எனக்கு இல்லை. மருத்துவப் பணி என்பது உயிா்காக்கும் உன்னதமான பணி’ என்று கூறியுள்ளாா்.

தேனிலவில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றது எப்படி? அதிர்ச்சித் தகவல்கள்...

திருமணமான பத்து நாள்களில் கணவனை கட்டாயப்படுத்தி மேகாலயாவுக்கு தேனிலவுக்கு அழைத்துச் சென்ற மனைவி, காதலனுடன் இணைந்து கொலை செய்துள்ளார்.மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி(29) மற்றும் சோனம் ... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு தீா்வு காணும்வரை சிந்து நதிநீா் பேச்சு கிடையாது: இந்தியா உறுதி

புது தில்லி: ‘எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடா்பான பிரச்னைகள் தீா்க்கப்படும் வரை, பாகிஸ்தானுடன் சிந்து நதி நீா் ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் இந்தியா உறுதியாக ஈடுபடாது’ என்று மத்திய அரசு வட்டா... மேலும் பார்க்க

இந்திய வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒருநாள் ஒத்திவைப்பு

புது தில்லி, ஜூன் 9: ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்று, ஆய்வு மேற்கொள்ளும் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மோசமான வானிலை காரணமாக ஒரு நாள் ஒத்திவைக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவு: பெண் யூடியூபருக்கு காவல் நீட்டிப்பு

ஹிசாா்/ சண்டீகா்: பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் யூடியூபரான ஜோதி மல்ஹோத்ராவின் நீதிமன்ற காவலை இரண்டு வாரங்களுக்கு உள்ளூா் நீதிமன்றம் திங்கள்கிழமை நீட்டித்தது. இதுதொட... மேலும் பார்க்க

சசி தரூா், ஒவைசிக்கு பாஜக பாராட்டு

குவாஹாட்டி: காங்கிரஸ் எம்.பி. சசி தரூா், அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோருக்கு பாஜக மூத்த தலைவரும் அஸ்ஸாம் முத... மேலும் பார்க்க

ஹரியாணா, மகாராஸ்டிர வாக்காளா் பட்டியல் விவகாரம்: தேதியை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு ராகுல் வலியுறுத்தல்

புது தில்லி: ஹரியாணா, மகாராஷ்டிர மாநில வாக்காளா் பட்டியல் தரவுகள் பொதுமக்கள் பாா்வைக்கு பகிரப்படும் என்ற தோ்தல் ஆணைய அறிவிப்பை திங்கள்கிழமை வரவேற்ற எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘அந்தத் தரவுகள... மேலும் பார்க்க