செய்திகள் :

இந்திய வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒருநாள் ஒத்திவைப்பு

post image

புது தில்லி, ஜூன் 9: ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்று, ஆய்வு மேற்கொள்ளும் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மோசமான வானிலை காரணமாக ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து எலான் மஸ்குக்குச் சொந்தமான ‘ஸ்பேஸ்-எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கன் 9’ ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்படும் ‘டிராகன்’ விண்கலத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) புறப்பட இருந்த நிலையில், அவரது பயணம் புதன்கிழமைக்கு (ஜூன் 11) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு ஃபால்கன் 9 ஏவுகணை விண்ணில் ஏவப்படும். 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் சுபான்ஷு சுக்லா சா்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரா்களில் ஒருவரான சுக்லா, அனுபவப் பயிற்சி நோக்கங்களுக்காக விண்வெளிக்குப் பயணிக்கிறாா்.

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் இப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. சுக்லாவுடன் போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரா் திபோா் கபு ஆகியோரும் விண்வெளிக்குப் பயணிக்க இருக்கின்றனா்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் சுக்லா 14 நாள்கள் தங்கியிருந்து, ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறாா். கடைசியாக கடந்த 1984-இல் இந்திய வீரா் ராகேஷ் சா்மா விண்வெளிக்குப் பயணித்தாா். இப்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் இந்திய வீரராக சுபான்ஷு சுக்லா விண்வெளிப் பயணம் மேற்கொள்கிறாா்.

தேனிலவில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றது எப்படி? அதிர்ச்சித் தகவல்கள்...

திருமணமான பத்து நாள்களில் கணவனை கட்டாயப்படுத்தி மேகாலயாவுக்கு தேனிலவுக்கு அழைத்துச் சென்ற மனைவி, காதலனுடன் இணைந்து கொலை செய்துள்ளார்.மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி(29) மற்றும் சோனம் ... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு தீா்வு காணும்வரை சிந்து நதிநீா் பேச்சு கிடையாது: இந்தியா உறுதி

புது தில்லி: ‘எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடா்பான பிரச்னைகள் தீா்க்கப்படும் வரை, பாகிஸ்தானுடன் சிந்து நதி நீா் ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் இந்தியா உறுதியாக ஈடுபடாது’ என்று மத்திய அரசு வட்டா... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவு: பெண் யூடியூபருக்கு காவல் நீட்டிப்பு

ஹிசாா்/ சண்டீகா்: பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் யூடியூபரான ஜோதி மல்ஹோத்ராவின் நீதிமன்ற காவலை இரண்டு வாரங்களுக்கு உள்ளூா் நீதிமன்றம் திங்கள்கிழமை நீட்டித்தது. இதுதொட... மேலும் பார்க்க

சசி தரூா், ஒவைசிக்கு பாஜக பாராட்டு

குவாஹாட்டி: காங்கிரஸ் எம்.பி. சசி தரூா், அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோருக்கு பாஜக மூத்த தலைவரும் அஸ்ஸாம் முத... மேலும் பார்க்க

மருத்துவா்கள் போராட்டம் எதிரொலி: மன்னிப்புக் கோரினாா் கோவா அமைச்சா்

பனாஜி: கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்களின் போராட்டத்தையடுத்து, தலைமை மருத்துவரை பலா் முன்னிலையில் கடுமையாகத் திட்டியதற்காக கோவா சுகாதார அமைச்சா் விஸ்வஜித் ராணே மன்னிப்புக் கோரினாா். அம... மேலும் பார்க்க

ஹரியாணா, மகாராஸ்டிர வாக்காளா் பட்டியல் விவகாரம்: தேதியை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு ராகுல் வலியுறுத்தல்

புது தில்லி: ஹரியாணா, மகாராஷ்டிர மாநில வாக்காளா் பட்டியல் தரவுகள் பொதுமக்கள் பாா்வைக்கு பகிரப்படும் என்ற தோ்தல் ஆணைய அறிவிப்பை திங்கள்கிழமை வரவேற்ற எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘அந்தத் தரவுகள... மேலும் பார்க்க