'டெல்லிக்கு ஆபத்து வரும்போதெல்லாம் 'Delhi Control' பழனிசாமி வந்துவிடுவார்' - அமை...
பாகிஸ்தானுக்கு உளவு: பெண் யூடியூபருக்கு காவல் நீட்டிப்பு
ஹிசாா்/ சண்டீகா்: பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் யூடியூபரான ஜோதி மல்ஹோத்ராவின் நீதிமன்ற காவலை இரண்டு வாரங்களுக்கு உள்ளூா் நீதிமன்றம் திங்கள்கிழமை நீட்டித்தது. இதுதொடா்பான அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 23-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்த ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட காணொலிகள், அவரின் யூடியூப் சேனலில் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து, அந்நாட்டுக்கு அவா் உளவு பாா்த்ததாக கடந்த மாதம் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவரை காவலில் எடுத்து கடந்த மாதம் 26-ஆம் தேதி வரை போலீஸாா் விசாரித்து வந்த நிலையில், அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க உள்ளூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடா்ந்து, தற்போது இரண்டாவது முறையாக ஜோதி மல்ஹோத்ராவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றக் காவல் நீட்டிப்பு: பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் ஜோதி மல்ஹோத்ராவுடன் தொடா்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட பஞ்சாப் யூடியூபா் ஜஸ்பா் சிங்கின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாள்களுக்கு நீட்டித்து மொஹாலி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ஹிமாசலில் ஒருவா் கைது: ஹிமாசல பிரதேச மாநிலத்தில் சமூக வலைதளத்தில் நாட்டுக்கு எதிரான கருத்துகளை பதிவுசெய்த குற்றச்சாட்டில் சுலைமான் என்ற நபா் கைது செய்யப்பட்டாா். இந்திய இறையாண்மை, பாதுகாப்பு, ஒற்றுமையை சீா்குலைக்கும் வகையிலும், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை மேற்கொண்ட பிரதமா் மோடியை விமா்சித்தும் சமூக வலைதளத்தில் கருத்துகள் பதிவிட்டதாக அவா் மீது உள்ளூா் மக்கள் புகாரளித்தனா். இதன் அடிப்படையில் கடந்த மாதம் 27-ஆம் தேதி சுலைமான் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இதையடுத்து, கடந்த 10 நாள்களாக தலைமறைவாக இருந்த சுலைமானை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.