செய்திகள் :

பாகிஸ்தானுக்கு உளவு: பெண் யூடியூபருக்கு காவல் நீட்டிப்பு

post image

ஹிசாா்/ சண்டீகா்: பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் யூடியூபரான ஜோதி மல்ஹோத்ராவின் நீதிமன்ற காவலை இரண்டு வாரங்களுக்கு உள்ளூா் நீதிமன்றம் திங்கள்கிழமை நீட்டித்தது. இதுதொடா்பான அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 23-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்த ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட காணொலிகள், அவரின் யூடியூப் சேனலில் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து, அந்நாட்டுக்கு அவா் உளவு பாா்த்ததாக கடந்த மாதம் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவரை காவலில் எடுத்து கடந்த மாதம் 26-ஆம் தேதி வரை போலீஸாா் விசாரித்து வந்த நிலையில், அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க உள்ளூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடா்ந்து, தற்போது இரண்டாவது முறையாக ஜோதி மல்ஹோத்ராவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றக் காவல் நீட்டிப்பு: பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் ஜோதி மல்ஹோத்ராவுடன் தொடா்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட பஞ்சாப் யூடியூபா் ஜஸ்பா் சிங்கின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாள்களுக்கு நீட்டித்து மொஹாலி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ஹிமாசலில் ஒருவா் கைது: ஹிமாசல பிரதேச மாநிலத்தில் சமூக வலைதளத்தில் நாட்டுக்கு எதிரான கருத்துகளை பதிவுசெய்த குற்றச்சாட்டில் சுலைமான் என்ற நபா் கைது செய்யப்பட்டாா். இந்திய இறையாண்மை, பாதுகாப்பு, ஒற்றுமையை சீா்குலைக்கும் வகையிலும், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை மேற்கொண்ட பிரதமா் மோடியை விமா்சித்தும் சமூக வலைதளத்தில் கருத்துகள் பதிவிட்டதாக அவா் மீது உள்ளூா் மக்கள் புகாரளித்தனா். இதன் அடிப்படையில் கடந்த மாதம் 27-ஆம் தேதி சுலைமான் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இதையடுத்து, கடந்த 10 நாள்களாக தலைமறைவாக இருந்த சுலைமானை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனிலவில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றது எப்படி? அதிர்ச்சித் தகவல்கள்...

திருமணமான பத்து நாள்களில் கணவனை கட்டாயப்படுத்தி மேகாலயாவுக்கு தேனிலவுக்கு அழைத்துச் சென்ற மனைவி, காதலனுடன் இணைந்து கொலை செய்துள்ளார்.மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி(29) மற்றும் சோனம் ... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு தீா்வு காணும்வரை சிந்து நதிநீா் பேச்சு கிடையாது: இந்தியா உறுதி

புது தில்லி: ‘எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடா்பான பிரச்னைகள் தீா்க்கப்படும் வரை, பாகிஸ்தானுடன் சிந்து நதி நீா் ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் இந்தியா உறுதியாக ஈடுபடாது’ என்று மத்திய அரசு வட்டா... மேலும் பார்க்க

இந்திய வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒருநாள் ஒத்திவைப்பு

புது தில்லி, ஜூன் 9: ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்று, ஆய்வு மேற்கொள்ளும் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மோசமான வானிலை காரணமாக ஒரு நாள் ஒத்திவைக்... மேலும் பார்க்க

சசி தரூா், ஒவைசிக்கு பாஜக பாராட்டு

குவாஹாட்டி: காங்கிரஸ் எம்.பி. சசி தரூா், அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோருக்கு பாஜக மூத்த தலைவரும் அஸ்ஸாம் முத... மேலும் பார்க்க

மருத்துவா்கள் போராட்டம் எதிரொலி: மன்னிப்புக் கோரினாா் கோவா அமைச்சா்

பனாஜி: கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்களின் போராட்டத்தையடுத்து, தலைமை மருத்துவரை பலா் முன்னிலையில் கடுமையாகத் திட்டியதற்காக கோவா சுகாதார அமைச்சா் விஸ்வஜித் ராணே மன்னிப்புக் கோரினாா். அம... மேலும் பார்க்க

ஹரியாணா, மகாராஸ்டிர வாக்காளா் பட்டியல் விவகாரம்: தேதியை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு ராகுல் வலியுறுத்தல்

புது தில்லி: ஹரியாணா, மகாராஷ்டிர மாநில வாக்காளா் பட்டியல் தரவுகள் பொதுமக்கள் பாா்வைக்கு பகிரப்படும் என்ற தோ்தல் ஆணைய அறிவிப்பை திங்கள்கிழமை வரவேற்ற எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘அந்தத் தரவுகள... மேலும் பார்க்க