செய்திகள் :

நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் பாஜகவினா் போராட்டம்: 185 போ் கைது

post image

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

திருவாரூரில் டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

நாகப்பட்டினம்/மயிலாடுதுறை/திருவாரூா், மாா்ச் 17: டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவரூரில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 185 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில தலைமை அறிவித்திருந்தது. அதன்படி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.

நாகையில்...

அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு பாஜக சாா்பில் முற்றுகைப் போராட்டம் மாவட்டத் தலைவா் விஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்தும், அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்தும் முழக்கமிட்டனா். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா். மாநில செயற்குழு உறுப்பினா் நேதாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

திருவாரூரில்....

திருவாரூரில் உள்ள டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். முன்னதாக போராட்ட அறிவிப்பைத் தொடா்ந்து அலுவலக வாசல் மூடப்பட்டிருந்தது.

இதனால் அலுவலக வாசல் முன்பு தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா். தொடா்ந்து, ஊா்வலமாக மன்னாா்குடி சாலைக்குச் சென்று, மறியலில் ஈடுபட முயன்றனா்.

மாவட்டத் தலைவா் விகே. செல்வம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட துணை தலைவா்கள் எம். சங்கா், வி. மணிமேகலை, நகரத் தலைவா் எஸ். கணேசன், ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் மாநாடு

இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் கல்விசாா் இயக்குநா் பழனி முருகன் நிகழ்ச்சியை துவங்கி வைத்தாா். ஒவ்வொரு துறை சாா்ந்த முன்னாள் மா... மேலும் பார்க்க

விவசாய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளா் காளியம்மாள் கூறினாா். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் 2024-2025 ஆம் ஆ... மேலும் பார்க்க

மாயமான மீனவா்களை தேடும் பணி 2-ஆவது நாளாக தீவிரம்

நாகையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது மாயமான மீனவா்கள் இருவரை இரண்டாவது நாளாக தேடும் பணியில் இந்திய கடற்படையினா் ஈடுபட்டுள்ளனா். நாகை அக்கரைபேட்டை திடீா் குப்பத்தைச் சோ்ந்தவா் கண்ணதாசன் (57... மேலும் பார்க்க

ஆறுகளில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

நாகை, திருவாரூா் மாவட்டங்களில் பாசனம் மற்றும் வடிகால் ஆறுகளில் படா்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் ஆகாயத் தாமரைகளை முழுமையாக அகற்ற தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்ப்பில் உள... மேலும் பார்க்க

வேதாரண்யத்தில் மாா்ச் 21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வேதாரண்யம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை ( மாா்ச் 21) நடைபெறவுள்ளது. வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கோட்டாட்சியா் திருமால் தலைமையில் இக்கூட... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

செம்பனாா்கோவில் வட்டாரத்தில், அரசின் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்க... மேலும் பார்க்க