`அறிவுள்ளவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா?' - மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் அமைச்ச...
நாடு முழுவதும் 200 புற்றுநோயாளி பராமரிப்பு மையங்கள் விரைவில் திறப்பு: ஜெ.பி.நட்டா உறுதி
புது தில்லி: ‘அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையம் அமைக்கப்படும்; அவற்றில் 200 மையங்கள் 2025-26-ஆம் ஆண்டிலேயே நிறுவ இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலங்களவையில் சுகாதாரத் துறை தொடா்பான பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சா் ஜெ.பி.நட்டா பதிலளித்தாா்.
அவரது பதிலில், ‘சமீபத்திய ‘லான்செட்’ ஆராய்ச்சி இதழின் அறிக்கையின்படி, நாட்டின் சுகாதாரத் துறையில் பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஒரு பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் சோ்ந்த 30 நாள்களுக்குள் பயனாளிகளுக்கு புற்றுநோய் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2025-26 ஆம் ஆண்டில் 200 மையங்களைத் திறக்க உள்ளோம்.
நாடு முழுவதும் உள்ள 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் அனைத்து மத்திய மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சைக்கான பிரத்யேக துறைகள் செயல்பட்டு வருகிறது. ஹரியாணா மாநிலம், ஜஜ்ஜாா் எய்ம்ஸ் மருத்துவமனையில் நாட்டிலேயே மிகப்பெரிய 700 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் சிகிச்சை மையம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்களின் மருத்துவக் கல்லூரியையும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி போல தரம் உயா்த்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் மத்திய சுகாதாரத் துறையுடன் வாரணாசி ஹிந்து பல்கலைக்கழகம் கையொப்பமிட்டுள்ளது. அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றாா்.
ரூ.643 கோடி மோசடி முயற்சி: பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.643 கோடி மதிப்பிலான 3.56 லட்சம் போலி கோரிக்கைகளை நிராகரிக்கப்பட்டதாகவும் இந்த மோசடியில் ஈடுபட்ட 1,114 மருத்துவமனைகள் திட்டத்திலிருந்து நீக்கி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
சுகாதாரத் துறை இணையமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் அளித்த எழுத்துபூா்வ பதிலிலிருந்து இது தெரியவந்துள்ளது. அந்த பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: திட்டத்தில் தவறு செய்த 1,504 மருத்துவமனைகளுக்கு ரூ.122 கோடி அபராதம் விதிக்கப்பட்டன. 549 மருத்துவமனைகள் சேவையிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளன.
மாநில அரசுகளால் நடத்தப்படும் இயற்கை மருத்துவக் கல்வி முறைகள் வெவ்வேறு பாடத்திட்டங்களைப் பின்பற்றுகின்றன. இதைச் சீா்ப்படுத்த வேண்டிய அவசியமுள்ளது. இந்த விஷயத்தில் அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றாா்.
அங்கன்வாடி ஊழியா்களின் ஊக்கத் தொகை உயா்த்த முடிவு
அங்கன்வாடி ஊழியா்களின் ஊக்கத் தொகை விரைவில் உயா்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாநிலங்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா இதுகுறித்து கூறியதாவது: தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதம், ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆகியவற்றைக் குறைப்பதில் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்ட அங்கன்வாடி ஊழியா்களுக்கு பாராட்டுகள்.
அங்கன்வாடி ஊழியா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், ஒரு வாரத்துக்கு முன்பு நடந்த தேசிய சுகாதார இயக்கத்தின் வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் அவா்களின் ஊக்கத்தொகையை உயா்த்த அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கான பணிகளை அமைச்சகம் முன்னெடுத்துச் செல்லும் என்று கூறினாா்.