செய்திகள் :

நிலுவைத்தொகை ரூ.1.36 லட்சம் கோடியைப் பெற மத்திய அரசு மீது சட்ட நடவடிக்கை: ஜாா்க்கண்ட் நிதியமைச்சா் தகவல்

post image

ராஞ்சி: மத்திய அரசு தங்கள் மாநிலத்துக்கு தர வேண்டிய ரூ.1.36 லட்சம் கோடி நிலக்கரி நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜாா்க்கண்ட் மாநில நிதியமைச்சா் ராதாகிருஷ்ண கிஷோா் தெரிவித்தாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி உள்ளது. பாஜக எதிா்க்கட்சியாக உள்ளது.

மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது மத்திய அரசு தரவேண்டிய நிதி தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடா்பாக முதலில் பதிலளித்த மாநில கலால் வரித் துறை அமைச்சா் யோகேந்திர பிரசாத், ‘மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு எவ்வளவு நிதி வராமல் பாக்கியுள்ளது என்பதை சரியாக கணக்கிட்டு அறிய மத்திய, மாநில அரசுகள் இணைந்து கூட்டுக்குழுவை அமைத்துள்ளன. பொதுத்துறை நிறுவனமான ‘கோல் இந்தியா’ ஜாா்க்கண்டில் இருந்து எடுத்த நிலக்கரி உள்ளிட்டவற்றில் இருந்து மட்டும் ரூ.1.36 லட்சம் கோடி மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது. இதனை கூட்டுக் குழு ஆய்வு செய்யும்’ என்றாா்.

இதையடுத்து, பேசிய ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ சரயு ராய், மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெறுவதற்கு மாநில அரசு என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்கு பதிலளித்த நிதியமைச்சா் ராதாகிருஷ்ண கிஷோா், ‘மத்திய நிலக்கரித் துறை அமைச்சா் ஜி. கிஷண் ரெட்டியை இரு வாரங்களுக்கு முன்பு சந்தித்துப் பேசியுள்ளேன். மத்திய அரசிடம் ரூ.1.36 லட்சம் கோடி நிலுவைத் தொகையைப் பெற ஏற்கெனவே சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக வருவாய் துறை, நிலச்சீா்திருத்தம், பதிவுத்துறை, வா்த்தகத் துறைக்கு எதிராகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என்றாா்.

அபு தாபியில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை! அவரது கடைசி ஆசை

புது தில்லி: அபுதாபியில் உத்தரப்பிரதேச பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்தில், அப்பெண்ணின் கடைசி ஆசை பற்றி தகவல் வெளியாகியிருக்கிறது.உத்தரப்பிரதேச மாநிலம் கேயேரா முக்லி கிராமத்தில் உள்ள ஒரு... மேலும் பார்க்க

கர்நாடக உள்கட்சிப் பூசல்: கார்கேவுடன் சிவக்குமார் ஆலோசனை!

கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் உள்கட்சிப் பூசல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தினார்.டி.கே. சிவக்குமார் முதல்வராவதை ... மேலும் பார்க்க

எஸ்டிபிஐ தலைவர் ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது!

புது தில்லி : எஸ்டிபிஐ தேசியத் தலைவர் எம். கே. ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஃபைஸியை தில்லி சர்வதேச விமான நிலையத்தில் அமலாக்கத... மேலும் பார்க்க

ஹரியாணா காங்கிரஸ் பெண் தொண்டர் கொலையான அன்று என்ன நடந்தது?

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகிறது.ஹிமானி நர்வாலுடன், கொலையாளி சச்சின், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் நட்பாக... மேலும் பார்க்க

கொலை வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் ராஜிநாமா!

பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்ட நிலையில், மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜிநாமா செய்துள்ளார்.அமைச்சர் முண்டேவின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதாக அறிவித்த முதல்வர... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அமைச்சரை ராஜிநாமா செய்ய உத்தரவிட்ட ஃபட்னவீஸ்! ஏன்?

மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டேவை ராஜிநாமா செய்ய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.துணை முதல்வர் அஜித் பவாருடனான ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவு... மேலும் பார்க்க