செய்திகள் :

மகாராஷ்டிர அமைச்சரை ராஜிநாமா செய்ய உத்தரவிட்ட ஃபட்னவீஸ்! ஏன்?

post image

மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டேவை ராஜிநாமா செய்ய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துணை முதல்வர் அஜித் பவாருடனான ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், தனஞ்சய் தனது பதவியை ராஜிநாமா செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா!

ராஜிநாமா ஏன்?

பீட் மாவட்டத்தில் பஞ்சயாத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் என்பவர கடந்த டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கும் மாநில அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் தேசியவாத காங்கிரஸைச் சோ்ந்த மாநில அமைச்சா் தனஞ்சய் முண்டேவின் நெருங்கிய கூட்டாளி வால்மிக் கராத் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, புணேவில் உள்ள காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் வால்மிக் சரணடைந்தார்.

இதனால் தனஞ்சய் முண்டேவை அமைச்சர் பதவியிலிருந்து விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே, தனஞ்சய் முண்டேவின் முதல் மனைவி கருணா சர்மா, கடந்த 2020ஆம் ஆண்டு பாந்த்ரா நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட குடும்ப வன்முறை வழக்கில் பிப்ரவரி மாதம் தீர்ப்பு வந்தது.

முண்டே மீதான குற்றத்தை உறுதி செய்த நீதிமன்றம், முதல் மனைவி மற்றும் மகளின் பராமரிப்புச் செலவுக்காக மாதம் ரூ. 2 லட்சம் அளிக்க இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், மகாராஷ்டிர அரசுக்கு அழுத்தம் அதிகரித்த நிலையில், பாஜகவின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸின் தலைவரும் துணை முதல்வருமான அஜித் பவாருடன் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் திங்கள்கிழமை இரவு ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு முண்டேவை பதவி விலகக் கேட்டுக் கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாயத்து தலைவர் கொலை ஏன்?

பீட் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு காற்றாலை நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை எதிா்த்ததற்காக, மாசாஜோக் கிராமப் பஞ்சாயத்தின் தலைவா் சந்தோஷ் தேஷ்முக் கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டாா்.

இந்தக் கொலை வழக்கில் இதுவரை 7 போ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் தலைமறைவாக இருக்கிறார்.

உ.பி.: மதமாற்றத்தில் ஈடுபட்ட நபர் மீது வழக்குப்பதிவு!

உ.பி.யில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்டதாக ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஷ்ரவஸ்தி நகரிலுள்ள பக்வான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் சிங். கடந்த சில ஆண்டுகளாக பஞ்... மேலும் பார்க்க

ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை விதித்த பெற்றோர், சகோதரியைக் கொன்ற இளைஞர்!

ஒடிசாவின் ஜகத்சிங்பூரில் ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை விதித்த பெற்றோர், சகோதரியைக் கொன்ற இளைஞரால் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜகத்சிங்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜெயபாடா சேத்தி சா... மேலும் பார்க்க

பூனையின் இறப்பால் துக்கம் தாளாமல் பெண் தற்கொலை: உ.பி.யில் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேசத்தில் பூனையின் இறப்பால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூஜா(32). இவர் கடந்த எட்டு ஆண்டுகள... மேலும் பார்க்க

மாதவி புச் மீதான நடவடிக்கைக்கு 4 வாரம் தடை: மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை: பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவா் மாதவி புரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக நான்கு வாரங்களுக்கு நடவடிக்கை எடுக... மேலும் பார்க்க

டிஜிட்டல் இந்தியாவில் கையால் 100 பக்க பட்ஜெட்டை எழுதிய நிதியமைச்சர்! யார் அவர்?

ராய்ப்பூர்: டிஜிட்டல் ஆதிக்க சகாப்தத்தில், 100 பக்க பட்ஜெட்டை கையால் எழுதி தாக்கல் செய்துள்ளார் சத்தீஸ்கர் நிதியமைச்சரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஓ.பி. செளத்ரி.முழு பட்ஜெட்டையும் தானே கையால் எழுதி... மேலும் பார்க்க

17 வயது சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த ஆண் நண்பர்!

மும்பையில் 17 வயது சிறுமி அவரது ஆண் நண்பரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மும்பையின் அந்தேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அதே பகுதியைச்... மேலும் பார்க்க