செய்திகள் :

மாதவி புச் மீதான நடவடிக்கைக்கு 4 வாரம் தடை: மும்பை உயர்நீதிமன்றம்

post image

மும்பை: பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவா் மாதவி புரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக நான்கு வாரங்களுக்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாதபி புச், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) நிா்வாக இயக்குநா் சுந்தரராமன் ராமமூா்த்தி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு ஊழல் தடுப்புப் பிரிவுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மாதபி புச், சுந்தரராமன் ராமமூா்த்தி உள்ளிட்டோா் மும்பை உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனா். தங்களது வாதங்களை கேட்காமலும் போதிய கால அவகாசம் வழங்காமலும் இந்த உத்தரவை மும்பை சிறப்பு நீதீமன்றம் பிறப்பித்ததாக அவா்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டனா்.

இதையும் படிக்க : கொலை வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் ராஜிநாமா!

அவசர வழக்ககாக இந்த மனுக்கள் மும்பை உயா் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜி.திகே தலைமையிலான அமா்வின் முன் பட்டியலிடப்பட்டது. இதையடுத்து, இந்த மனுக்கள் மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறவுள்ளதால், அதுவரை குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஊழல் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்ற அமா்வு தெரிவித்தது.

இந்த நிலையில், மாதவி புச் உள்ளிட்டோரின் வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய புகார்தாரருக்கு 4 வாரங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது, அதுவரை மாதவி உள்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தான அறைகள் பெற புதிய விதி: தரிசன டிக்கெட் இருந்தால்தான்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தங்கும் அறைகள் ஒதுக்கீட்டில் புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி ஏழும... மேலும் பார்க்க

மூடநம்பிக்கை: பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த கொடூரம்!

ஒடிசா மாநிலத்தின் நபரங்பூரில் பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தின் ஹண்டல்படா கிராமத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

ஆறு ஆண்டுகளாக நிரப்பப்படாத மக்களவைத் துணைத் தலைவர் பதவி!

18-ஆவது மக்களவை தொடங்கி 9 மாதங்கள் ஆகியும், இதுவரை அவையின் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது.17-ஆவது மக்களவை முழுவதும் துணைத் தலைவர் பதவி நிரப்பப்... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் ஓர் ஆசிரியர் பள்ளிகள் இத்தனையா?

ஜார்க்கண்டில் 8 ஆயிரம் அரசுப் பள்ளிகள் தலா ஒரு ஆசிரியருடன் செயல்படுவதாக கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் தெரிவித்தார்.ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், ஆசிரியர்கள... மேலும் பார்க்க

சலவைத் தொழிலும் தொழிற்சாலை சட்டத்தின் கீழ் வரும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: துணிகளை துவைத்து உலர்த்தி தரும் தொழிலானது, உற்பத்தி துறை என்ற அடிப்படையில், தொழிற்சாலை சட்டத்தின் கீழ் தகுதி பெறுகிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.முக்கிய வழக்கு ஒன்றில் குறிப்ப... மேலும் பார்க்க

பேரவைக்குள் பான்மசாலா போட்டுத் துப்பிய எம்எல்ஏ! தலைவர் எச்சரிக்கை!

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்குள் பான்மசாலா போட்டுத் துப்பிய எம்எல்ஏவுக்கு பேரவைத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. மாநில நிதியம... மேலும் பார்க்க